1642848962 Fire News 02
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கிளிநொச்சியில் தீக்கிரையான தாய், மகள்! – சந்தேகத்துக்கிடமான பொருட்கள் மீட்பு!

Share

கிளிநொச்சி – தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புன்னைநீராவி நாதன் குடியிருப்பு பகுதியில் நேற்றுமுன்தினம் 20 ஆம் திகதி நள்ளிரவு 11.50 மணியளவில் தாயும் மகளும் எரிந்து உருக்குலைந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டனர்.

ஆனந்தராசா சீதேவி (வயது – 47) என்ற 07 பிள்ளைகளின் தாயாரும் அவரது மகளுமே லக்சிகா (வயது – 17) தீக்கிரையான நிலையில் சடலமாக மீட்கப்பட்டிருந்தனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு தெரிவிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்துக்கு வந்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இன்றையதினம் கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற நீதவான் எஸ்.லெனின்குமார் சம்பவ இடத்துக்கு இன்று (22) காலை விஜயம் மேற்கொண்டார்.

இந்த நிலையில், குறித்த சடலங்களை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ள நிலையில் சடலம் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இதேவேளை, சம்பவம் இடம்பெற்ற பகுதியில் பெற்றோல் நிரப்பப்பட்ட பெற்றோல், கத்தி ஒன்றும் மற்றும் தொலைபேசி ஒன்று ஆகியவை தடயவியல் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பாக இதுவரை எவரும் கைதுசெய்யப்படாத நிலையில், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

1642848962 Fire News 8 1642848962 Fire News 2

#SriLankaNews

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
22 10
இலங்கைசெய்திகள்

இலங்கை வரலாற்றில் நியமிக்கப்பட்ட முதல் பெண் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ..!

இலங்கை வரலாற்றில் முதல் முறையாக,நியமிக்கப்பட்ட பெண் பரீட்சைகள் ஆணையாளர் நாயகமான ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே(8H49KG)...

21 11
உலகம்செய்திகள்

பாகிஸ்தானுக்கு வெளிப்படையாக ஆதரவளிக்கும் நாடு : கடுப்பில் இந்தியா

துருக்கி (turkey), வெளிப்படையாக தனது பாகிஸ்தான் (pakistan) ஆதரவை தெரிவித்துள்ளது இந்தியாவிற்கு (india) சினத்தை ஏற்படுத்தியுள்ளது....

20 16
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் அணு உலைகளில் கசிவு ஏற்பட்டதா..! வெளியானது புதிய தகவல்

பாகிஸ்தானில் உள்ள எந்த ஓர் அணு உலையில் இருந்தும் கதிர்வீச்சு கசிவு இல்லை என்று உலகளாவிய...

19 16
இலங்கைசெய்திகள்

அதிகரிக்கப்போகும் மின் கட்டணம் : அபாய அறிவிப்பை வெளியிட்ட முன்னாள் எம்.பி

அநுர அரசாங்கம் எதிர்காலத்தில் மின்சாரக் கட்டணத்தை 25% முதல் 30% வரை அதிகரிக்கத் தயாராகி வருவதாகவும்,...