milk
செய்திகள்இலங்கை

பாலின் கொள்முதல் விலை அதிகரிப்பு!

Share

பால் பண்ணையாளர்களின் ஒரு லீற்றர் திரவப் பாலுக்கான கொடுப்பனவு 5 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக மில்கோ நிறுவன  தலைவர் லசந்த விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இவ் விலை அதிகரிப்பு பெப்ரவரி முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் என அவர் தெரிவித்துள்ளார்.

பாற்பண்ணையாளர்களை ஊக்குவிக்கும் வகையில் இவ் விலையேற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மில்கோ நிறுவன  தலைவர் லசந்த விக்கிரமசிங்க தெரிவித்தார்.

இவ்விலை உயர்வால், விவசாயிகளுக்கு மிக உயர்ந்த தரமான பால் லீற்றருக்கு சுமார் ரூ.100 கிடைக்கும் என்றும், பாலின் தரத்தைப் பொறுத்து செலுத்த வேண்டிய தொகை நிர்ணயிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

பால் பண்ணையாளர்களால் வழங்கப்படும் பாலின் அளவுக்கேற்ப லீற்றருக்கு செலுத்தப்படும் தொகையும் மாறுபடுமெனவும், லீற்றரின் கொள்ளளவு அதிகரிக்கும் போது விவசாயியின் வருமானமும் அதிகரிக்கும் என்றும் தலைவர் மேலும் தெரிவித்தார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
gold price growth
இலங்கை

இன்றைய நாளில் உயர்வினை பதிவு செய்த தங்கத்தின் விலை.

இலங்கையில் தங்கத்தின் விலை இன்று அதிகரிப்பை பதிவு செய்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம்...

sajith premadasa
இலங்கை

எதிர்க்கட்சித் தலைவர் கொண்டுவந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானம்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள், இன்று பாராளுமன்றத்தில் வைத்து நம்பிக்கையில்லாத்...

Suresh Salley
இலங்கை

மீண்டும் விசாரணைக்கு வந்த சுரேஷ் சலே வழக்கு.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளுக்காக , பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது...

body
இலங்கை

இரத்தினபுரியில் மீட்கப்பட்ட இளம்பெண்ணின் சடலம்!

  இரத்தினபுரி , கொடிகமுவவில் பகுதியில் தனியாக வசித்து வந்த 32 வயதான கமகே நிசான்ச...