maithri
செய்திகள்இலங்கை

மைத்திரி அணி யாழில் தனிவழி!

Share

” ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை பலப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். விரைவில் புதிய தொகுதி அமைப்பாளர்கள் நியமனம் இடம்பெறும்.” – என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

சுதந்திரக்கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் நேற்றிரவு கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்றது.

இதன்போது மாகாணசபைத் தேர்தலை விரைவில் நடத்துமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, சில பகுதிகளில் கூட்டாகவும், சில மாவட்டங்களில் தனித்து களமிறங்குவதற்கும் சுதந்திரக்கட்சி உத்தேசித்துள்ளது.

இதன்படி வடக்கில் யாழ்.மாவட்டத்தில் அக்கட்சி கை சின்னத்தில் அல்லது கூட்டணி அமையும் பட்சத்தில் வெற்றிலை சின்னத்தில் போட்டியிடும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

கடந்த பொதுத்தேர்தலில் யாழ். மாவட்டத்தில் தனித்து போட்டியிட்ட சுதந்திரக்கட்சி ஒரு ஆசனத்தை கைப்பற்றியது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
32 5
இலங்கைசெய்திகள்

தேசிய மக்கள் சக்தியினை விட்டு வெளியேறுவதாக யாழ். உறுப்பினர் பகிரங்க அறிவிப்பு

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த, தேசிய மக்கள் சக்தியின் அடிப்படை உறுப்பினர் ஒருவர் தனது பதவியில் இருந்து விலகுவதாக...

31 5
இலங்கைசெய்திகள்

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (16) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. இதன்படி, அமெரிக்க டொலரின்...

6 19
இலங்கைசெய்திகள்

முற்றாக முடங்கி போன உப்பு உற்பத்தி

2025ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதிக்குள் உப்பு உற்பத்தி முற்றாக முடங்கிப் போயுள்ளதாக உப்புக்கூட்டுத்தாபன தலைவர் நந்தனதிலக...

19 12
இலங்கைசெய்திகள்

உப்பு இறக்குமதிக்கு அமைச்சரவையின் விசேட அனுமதி

நாட்டில் நிலவும் உப்புத்தட்டுப்பாட்டை நீக்கும் வகையில் உப்பு இறக்குமதிக்கான விசேட அனுமதியொன்றை அமைச்சரவை வழங்கியுள்ளது. அதன்...