maithri
செய்திகள்இலங்கை

மைத்திரி அணி யாழில் தனிவழி!

Share

” ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை பலப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். விரைவில் புதிய தொகுதி அமைப்பாளர்கள் நியமனம் இடம்பெறும்.” – என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

சுதந்திரக்கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் நேற்றிரவு கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்றது.

இதன்போது மாகாணசபைத் தேர்தலை விரைவில் நடத்துமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, சில பகுதிகளில் கூட்டாகவும், சில மாவட்டங்களில் தனித்து களமிறங்குவதற்கும் சுதந்திரக்கட்சி உத்தேசித்துள்ளது.

இதன்படி வடக்கில் யாழ்.மாவட்டத்தில் அக்கட்சி கை சின்னத்தில் அல்லது கூட்டணி அமையும் பட்சத்தில் வெற்றிலை சின்னத்தில் போட்டியிடும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

கடந்த பொதுத்தேர்தலில் யாழ். மாவட்டத்தில் தனித்து போட்டியிட்ட சுதந்திரக்கட்சி ஒரு ஆசனத்தை கைப்பற்றியது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
29 6
செய்திகள்உலகம்

போர்நிறுத்தத்திற்கோ அல்லது பேச்சுவார்த்தைக்கோ ஈரான் ஒருபோதும் கோரிக்கை விடுக்கவில்லை: அப்பாஸ் அரக்சி

ஈரான் மற்றும் அமெரிக்கா – இஸ்ரேல் இடையிலான தற்போதைய போர்ச் சூழலில், ஈரான் எந்தவொரு போர்நிறுத்தத்தையோ...

28 6
செய்திகள்இந்தியா

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026: தேர்தல் ஆணையம் அட்டவணையை வெளியிட்டது

தமிழகத்தில் ஆளும் கட்சியான தி.மு.க. அரசின் பதவிக்காலம் எதிர்வரும் மே மாதம் 10-ஆம் திகதியுடன் நிறைவடைகிறது....

27 6
செய்திகள்இலங்கைபிராந்தியம்

உரத்திற்கும் QR குறியீடு வரும் அச்சம்: அரசாங்கத்தின் நிர்வாகத்தை விமர்சித்த சஜித் பிரேமதாச

விவசாயிகள் கொள்வனவு செய்யும் உரத்திற்கும் எதிர்காலத்தில் QR குறியீடு முறைமை அறிமுகப்படுத்தப்படலாம் என்ற அச்சம் எழுந்துள்ளதாக...

26 7
செய்திகள்உலகம்

லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்: உயிரிழப்பு 850 ஆக அதிகரிப்பு!

லெபனானில் இஸ்ரேல் முன்னெடுத்து வரும் வான்வழித் தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 850 ஆக உயர்ந்துள்ளதாக லெபனான்...