28 6
செய்திகள்இந்தியா

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026: தேர்தல் ஆணையம் அட்டவணையை வெளியிட்டது

Share

தமிழகத்தில் ஆளும் கட்சியான தி.மு.க. அரசின் பதவிக்காலம் எதிர்வரும் மே மாதம் 10-ஆம் திகதியுடன் நிறைவடைகிறது.

இதேபோல், புதுச்சேரி (ஜூன் 15), மேற்கு வங்காளம் (மே 7), அசாம் (மே 20), கேரளா (மே 23) ஆகிய மாநிலங்களின் பதவிக்காலமும் முடிவடைகிறது.

எனவே, தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகள் உள்பட 5 மாநிலங்களிலும் மொத்தம் உள்ள 824 சட்டசபை தொகுதிகளுக்கும் தேர்தலை நடத்த இந்திய தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்து வருகிறது.

இந்த நிலையில், 5 மாநில சட்டசபை தேர்தல் திகதியை இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் இன்று (15) டெல்லியில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் வெளியிட்டார்.

அதன்படி, 234 தொகுதிகளை கொண்ட தமிழக சட்டசபைக்கு ஏப்ரல் 23- ந் திகதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடத்தப்படுகிறது.

வேட்புமனு தாக்கல் மார்ச் 30-ஆம் திகதி தொடங்குகிறது.

வேட்புமனு தாக்கல் ஏப்ரல் 6-ஆம் திகதி முடிகிறது. வேட்பு மனு பரிசீலனை ஏப்ரல்7 ஆம் திகதி இடம்பெறுகிறது.

வேட்புமனுக்களை திரும்பப் பெறுவதற்கு கடைசி நாள் ஏப்ரல் 9 ஆம் திகதி ஆகும். ஏப்ரல் 23 ஆம் திகதி வாக்குப்பதிவு ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது.

வாக்கு எண்ணிக்கை மே 4 ஆம் திகதி நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

அன்று காலை 10 மணி முதல் முன்னணி நிலவரமும், மாலை முதல் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் விவரமும் தெரியவரும். அன்று இரவே தமிழகத்தில் ஆட்சியை பிடிக்கப்போவது யார் என்பது தெரிந்து விடும்.

தமிழக சட்டசபை தேர்தல் – ஏப்ரல் 23-ம் திகதி

வேட்பு மனுத்தாக்கல் தொடக்கம் – மார்ச் 30-ம் திகதி

மனுத்தாக்கலுக்கு கடைசி நாள் – ஏப்ரல் 6-ம் திகதி

வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை – ஏப்ரல் 7-ம் திகதி

மனுக்கள் திரும்ப பெற கடைசி நாள் – ஏப்ரல் -9-ம் திகதி

வாக்குப்பதிவு – ஏப்ரல் 23-ம் திகதி

வாக்கு எண்ணிக்கை – மே 4-ம் திகதி

இதேவேளை கேரளா, அசாம், புதுச்சேரி மாநிலங்களின் தேர்தல் ஏப்ரல் 9 ஆம் திகதியும், மேற்கு வங்காளத்தின் தேர்தல் இரண்டு கட்டங்களாக ஏப்ரல் 23 மற்றும் 29 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...