courts
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மாவீரர் நாள் தடை : பொலிஸாரின் விண்ணப்பத்தை நிராகரித்தது மன்னார் நீதிமன்று

Share

மாவீரர் நினைவேந்தலுக்கு தடைவிதிக்க கோரி மன்னார் நீதிவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட விண்ணப்பம், மன்னார் நீதவானால் நிராகரிக்கப்பட்டது.

நாளைய தினம் மன்னாரில் மாவீரர் நினைவேந்தல் இடம்பெறவுள்ளது என தெரிவித்து மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியினால் இன்று தாக்கல் செய்யப்பட விண்ணப்பமே நிராகரிக்கப்பட்டுள்ளது.

விசாரணையை மேற்கொண்ட நீதவான், தகுந்த சாட்சிகள் இல்லை என தெரிவித்து குறித்த விண்ணப்பத்தை நிராகரித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், சாள்ஸ் நிர்மலநாதன் , மன்னார் நகர முதல்வர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன், உப- தவிசாளர் எஸ்.ஜாட்சன், நகர சபை உறுப்பினர் எஸ்.ஆர்.குமரேஸ் மற்றும் தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன் ஆகிய 6 பேருக்கும் எதிராகவே மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியினால் மாவீரர் தினத்தை அனுஷ்டிக்க தடை விதிக்க கோரி விண்ணப்பம் தாக்கல் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
20 18
உலகம்செய்திகள்

ஈழத் தமிழர்களுக்கு நம்பிக்கையூட்டும் கனடா நினைவுத்தூபி : நிமால் விநாயகமூர்த்தி

தமிழின அழிப்பின் நினைவு நாளில் கனடா நினைவுத்தூபி (Tamil Genocide Monument) ஈழத் தமிழர்களுக்கு நம்பிக்கையை...

19 18
இலங்கைசெய்திகள்

கல்வி அமைச்சு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

உயர்தர தொழிற் பாடத்துறையின் கீழ் 12 ஆம் தரத்தில் மாணவர்களை அனுமதிப்பதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது. குறித்த...

18 17
இலங்கைசெய்திகள்

தலைவரின் மகன் பாலசந்திரன் இன்றும் வாழ்கின்றான் – ஜக்மோகன் சிங் உருக்கம்

விடுதலைப்புலிகளின் தலைவரின் மகன் பாலசந்திரன் எங்கள் இதயங்களில் இருக்கின்றான் என பஞ்சாப் மாநில முன்னாள் சட்டமன்ற...

17 17
உலகம்செய்திகள்

முள்ளிவாய்க்கால் தினத்தை நினைவு கூர்ந்த தவெக தலைவர் விஜய்

நம் தொப்புள் கொடி உறவுகளுக்கு நாம் இருப்போம் என முள்ளிவாய்க்கால் தினத்தன்று உறுதி ஏற்பதாக தமிழக...