courts
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மாவீரர் நாள் தடை : பொலிஸாரின் விண்ணப்பத்தை நிராகரித்தது மன்னார் நீதிமன்று

Share

மாவீரர் நினைவேந்தலுக்கு தடைவிதிக்க கோரி மன்னார் நீதிவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட விண்ணப்பம், மன்னார் நீதவானால் நிராகரிக்கப்பட்டது.

நாளைய தினம் மன்னாரில் மாவீரர் நினைவேந்தல் இடம்பெறவுள்ளது என தெரிவித்து மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியினால் இன்று தாக்கல் செய்யப்பட விண்ணப்பமே நிராகரிக்கப்பட்டுள்ளது.

விசாரணையை மேற்கொண்ட நீதவான், தகுந்த சாட்சிகள் இல்லை என தெரிவித்து குறித்த விண்ணப்பத்தை நிராகரித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், சாள்ஸ் நிர்மலநாதன் , மன்னார் நகர முதல்வர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன், உப- தவிசாளர் எஸ்.ஜாட்சன், நகர சபை உறுப்பினர் எஸ்.ஆர்.குமரேஸ் மற்றும் தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன் ஆகிய 6 பேருக்கும் எதிராகவே மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியினால் மாவீரர் தினத்தை அனுஷ்டிக்க தடை விதிக்க கோரி விண்ணப்பம் தாக்கல் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...