nia scaled
செய்திகள்இந்தியாஇலங்கை

ஆயுத கடத்தலுடன் விடுதலைப் புலிகளுக்கு தொடர்பு! – இந்தியா குற்றச்சாட்டு

Share

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆயுத கடத்தலுடன் தொடர்பு இருப்பதாக இந்தியா குற்றம் சுமத்தியுள்ளது.

இதன்படி, ஆயுதங்கள், போதைப் பொருள் மற்றும் துப்பாக்கி ரவைகள் கடத்தல்களுடன் விடுதலைப் புலிகளுக்கு தொடர்பு இருப்பதாக இந்திய தேசிய புலனாய்வு முகவர் நிறுவனம் அறிவித்துள்ளது.

கடந்த வருடம் இலங்கை மீன்பிடிப் படகு ஒன்றில் இவ்வாறு ஆயுதங்கள் கடத்தப்பட்டதாகத் தெரிவித்துள்ளது. இந்த கடத்தல்களில் ஈடுபட்டதாக தெரிவித்து சுரேஸ் ராஜ் மற்றும் சௌந்தராஜ் ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டிருந்தனர்.

குறித்த சந்தேக நபர்கள் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், கைது செய்யப்பட்டவர்களிடம் மேற்கொள்ளபட்ட விசாரணையில் அவர்கள் விடுதலைப் புலி உறுப்பினர்கள் என்பது தெரியவந்துள்ளது என இந்தியாவின் ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

இந்த இருவரும் தமிழீழ விடுதலைப் புலி செயற்பாடுகளை இரகசியமாக முன்னெடுப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

அத்துடன், தமிழகம், இலங்கை மற்றும் ஏனைய உலக நாடுகளின் புலி தலைவர்களின் மேற்பார்வையின் கீழ் இவர்கள் செயற்பட்டு வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் 18ம் திகதி இந்திய கரையோரப் பாதுகாப்புப் படையினர் அரேபிய கடலில் வைத்து இலங்கை மீன்பிடிப் படகினை கைப்பற்றியிருந்தனர்.

இந்த படகில் போதைப் பொருள், துப்பாக்கிகள், துப்பாக்கி ரவைகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் மீட்கப்பட்டிருந்தன. இந்த படகில் பயணித்த ஆறு இலங்கையர்களும் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இது குறித்து வழக்கு விசாரணைகள் இந்திய தேசிய புலனாய்வு முகவர் நிறுவனம் ஒப்படைக்கப்பட்டது.

இந்த நிலையில் போதைப்பொருள், தங்க கடத்தல் மற்றும் ஹவாலா நடவடிக்கைகள் மூலம் விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளுக்காக குற்றம் சாட்டப்பட்டவர் நிதி சேகரித்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளதாக இந்தியாவின் தேசிய புலனாய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
19 4
செய்திகள்உலகம்

ஈரான் போர் பதற்றங்களுக்கு மத்தியில்: அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்காக வெள்ளை மாளிகையில் இடம்பெற்ற சிறப்புப் பிரார்த்தனை!

ஈரானுடனான மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அந்நாட்டின் பாதுகாப்புப்...

20 6
செய்திகள்உலகம்

பாபா வாங்காவின் உலகப்போர் கணிப்புடன் ஒத்துப் போகிறதா தற்போதைய ஈரான்-இஸ்ரேல் மோதல்? அச்சத்தில் உலக நாடுகள்!

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே தீவிரமடைந்துள்ள போர்ச் சூழல், புகழ்பெற்ற பல்கேரியத் தீர்க்கதரிசி பாபா வாங்கா...

21 6
செய்திகள்உலகம்

ஈரான் கப்பல் மற்றும் பணியாளர்களை மீட்ட இலங்கை: ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு!

இலங்கை கடற்பரப்பில் அண்மையில் தாக்குதலுக்கு உள்ளான ஈரானியக் கப்பல் மற்றும் அதில் இருந்த பணியாளர்களை மீட்பதற்காக...

24 3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அஸ்வெசும பயனாளிகளின் தகவல்கள் புதுப்பிப்பு: மார்ச் 28 வரை கணக்கெடுப்பு பணிகள் தீவிரம்!

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் முதற்கட்டத்தின் கீழ் (2022/2023) விண்ணப்பித்த பயனாளிகள் மற்றும் நன்மைகளைப் பெறாத விண்ணப்பதாரர்கள்...