75a7e9e2 324c 488f ae7d f9d6a3f18624
செய்திகள்இலங்கைபிராந்தியம்

காதல் விவகாரம் ! – யாழில் வீடு புகுந்து தாக்குதல் – மூவர் கைது

Share

யாழ்ப்பாணம் கோண்டாவில் பகுதியில் உள்ள வீட்டின் மீது தாக்குதல் நடத்திய குழுவைச் சேர்ந்த மூவர் கோப்பாய் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

குறித்த கைது நடவடிக்கை நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ளது

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

கோண்டாவில் பகுதியில் உள்ள வீடொன்றினுள் மோட்டார் சைக்கிளில் வந்த குழு ஒன்று அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்தியுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில், விரைந்து செயற்பட்ட கோப்பாய் பொலிஸார் சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக வைத்து சந்தேகநபர்களை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணையைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

காதல் விவகாரம் காரணமாக இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. மேலதிக விசாரணைகள் இடன்பெற்று வருகின்றன என கோப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

2c9edcdc d73c 4cc1 b15c 1786b7e0d140 9c694f28 b9fa 4ebe b315 34fdc22520dd

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
army are
இலங்கை

போதைப்பொருளுடன் கைதான முன்னாள் ராணுவ சிப்பாய்.

கம்பஹா மாவட்டம், கந்தானை பிரதேசத்தில் 120 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் மகரை பிரதேசத்தை சேர்ந்த 56...

body 2
இலங்கை

மூன்று பிள்ளைகளின் தந்தை மூன்று நாட்களின் பின் சடலமாக மீட்பு.

மொனராகலை மாவட்டம், படல்கும்புரை பிரதேசத்தில் வீட்டிலிருந்து வெளியே சென்ற நிலையில் காணாமல்போயிருந்த குடும்பஸ்தர் ஒருவர், மூன்று...

acdent 19
இலங்கை

இளைஞர்களின் உயிரைக்குடித்த வேகம்.

  இன்று அதிகாலை சுமார் 2.30 மணியளவில் ஹொரணை – மொரகஹஹேன வீதியில் இடம்பெற்ற விபத்தில்...

fire 19
இலங்கை

அதிகரித்துள்ள வெப்பத்திற்கு மத்தியில் இரத்மலானை குடியிருப்பு வளாகமொன்றில் தீ பரவல்.

இரத்மலானை பொருளாதார மத்திய நிலையத்துக்கு அருகிலுள்ள குடியிருப்பு வளாகமொன்றில் இன்று தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தகவல் கிடைத்ததைத்...