நீரில் மூழ்கிய
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

விகாரைக்கு வழிபாடு செய்ய வந்த இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழப்பு!

Share

பலாங்கொடை – கூரகலை விகாரைக்கு வழிபாடு செய்ய வந்த இளைஞர் ஒருவர், அங்குள்ள தூவிலிஎல்ல நீர்வீழ்ச்சிக்கு நீராடச் சென்றபோது அடித்துச் செல்லப்பட்டு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்த நபர் மாத்தறை – மாய்ம்மன பகுதியைச் சேர்ந்த 28 வயதான சந்திமால் புத்திக என்பவராவார்.

இவரோடு விகாரைக்குப் பயணித்த குழுவினர் இவ்விடயம் தொடர்பில் கல்தோட்டைப் பொலிஸாருக்குத் தகவல் வழங்கியுள்ளனர்.

இளைஞரின் சடலத்தை மீட்டுள்ள கல்தோட்டைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, தூவிலஎல்ல மற்றும் இப்பகுதி நீர்நிலைகளில் இத்தினங்களில் நீரின் வேகம் அதிகரித்துள்ளதால் மிக அவதானமாக நீராடுமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
சரத் அபேகோன்n
இலங்கை

பதிவி ஏற்கும்போதே ஜனாதிபதியிடம் குறிப்பிட்டேன்.

மத்திய மாகாண ஆளுநர் பதவியிலிருந்து விலகுவதாகத் தெரிவித்து, ஜனாதிபதிக்குத் தான் அனுப்பிய கடிதத்திற்கு இதுவரை எந்தவொரு...

yositha 1
இலங்கை

ஒத்திவைக்கப்பட்டது யோஷிதவின் வழக்கு.

பணமோசடித் தடுப்புச் சட்டத்தின் கீழ் யோஷித ராஜபக்ஷவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு கொழும்பு மேல்...

arested 3
இலங்கை

வெளிநாட்டு குண்டுகளுடன் ஒருவர் கைது – கைப்பற்றப்பட்ட ஆயுத தொகுதி !

யக்கல பிரதேசத்தில் வைத்து, ராகமவைச் சேர்ந்த 42 வயதுடைய நபரொருவர் 2 கையெறி குண்டுகள் மற்றும்...

arrest warrant d
இலங்கை

முக்கிய நபர்கள் மீது பிறப்பிக்கப்பட்ட பிடியாணை உத்தரவு.

நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் எரங்க குணசேகர மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் மனுவர்ண உள்ளிட்ட...