rtjy 184 scaled
இலங்கைசெய்திகள்

இளம் தாயொருவர் 11 மாத பெண் குழந்தையுடன் மாயம்!

Share

இளம் தாயொருவர் 11 மாத பெண் குழந்தையுடன் மாயம்!

அங்குருவத்தோட்ட, உரதுதாவ பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்து இளம் தாயும், அவரது 11 மாத பெண் குழந்தையும் காணாமல்போயுள்ளதாக அங்குருவாத்தோட்ட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உரதுதாவ பகுதியினை சேர்ந்த வாசனா குமாரி என்ற 24 வயதுடைய ஒரு பிள்ளையின் தாயும், அவரது 11 மாத மகளும் நேற்றுமுன்தினம் (18) முதல் காணாமல்போயுள்ளதாக கணவர் அங்குருவாதொட்ட பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

காணாமல்போன பெண்ணின் கணவரின் மைத்துனரான முன்னாள் இராணுவ சிப்பாய் ஒருவர், சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார். இதற்கமைய, விசாரணையை ஆரம்பித்த பொலிஸார் குறித்த வீட்டை சோதனையிட்டுள்ளனர்.

இதன்போது பெண்ணின் வீட்டின் சமையலறைப் பகுதியில் உள்ள குளிர்சாதனப் பெட்டியின் கதவில் சில கறைகளும், தரையில் இரத்தக் கறைகளும் காணப்பட்டதாக விசாரணை நடத்திய பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், காணாமல்போன பெண்ணின் கணவன் தனது மைத்துனர் வீட்டிற்கு வந்துள்ளதாகவும், அவர் குறித்து சந்தேகம் உள்ளதாகவும் முறைப்பாடு செய்துள்ளதாக பொலிஸ் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

மேலும், கணவர் இல்லாத நேரத்தில் மைத்துனர் வந்து செல்வது தொல்லையாக இருப்பதாக கடந்த சில தினங்களுக்கு முன்னர் மனைவி இரண்டு தடவைகள் தன்னிடம் கூறியதாகவும் அவரது முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தற்போது பொலிஸ் காவலில் உள்ள நபர் மூன்று பெண்களிடம் தகாத வார்த்தை பிரயோகம் செய்தவர் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இளம் தாய் காணாமல்போனதையடுத்து, சந்தேகநபர் தனது மனைவியுடன் சம்பவம் தொடர்பில் விசாரிப்பதற்காக வந்த முச்சக்கர வண்டியை மோப்ப நாய் சுற்றியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதற்கமைய, இளம் தாய் மற்றும் 11 மாதகுழந்தை காணாமல்போனமை தொடர்பில் அங்குருவத்தோட்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு மேலதிகமாக புலனாய்வு அதிகாரிகளும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
25 69149dba7d420
உலகம்செய்திகள்

முதுகலை, முனைவர் பட்ட மாணவர்களுக்கான கல்வி அனுமதி நடைமுறை இலகுபடுத்தப்பட்டது – மாகாண சான்றளிப்பு இனித் தேவையில்லை!

எதிர்வரும் 2026ஆம் ஆண்டு முதல் சர்வதேச மாணவர்கள் கல்வி அனுமதிகளைப் பெறும் முறையை கனடா இலகுவாக்க...

MediaFile 2 2
செய்திகள்இலங்கை

கெஹல்பத்தர பத்மே வாக்குமூலத்தின் அடிப்படையில்: முன்னணி நடிகை ஒருவர் விரைவில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்படலாம்!

கைது செய்யப்பட்டுத் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள பாதாள உலகக் குழு உறுப்பினர் கெஹல்பத்தர பத்மே வழங்கிய வாக்குமூலத்தின்...

25 69148ab688d8c
செய்திகள்உலகம்

அமெரிக்காவிற்குத் திறமையான தொழிலாளர்கள் தேவை: H-1B விசா கட்டண உயர்வுக்குப் பின் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்பு!

தனது நாட்டிற்கு வெளிநாடுகளில் இருக்கும் திறமையான தொழிலாளர்கள் மற்றும் சிறப்புத் திறன்களைக் கொண்டவர்கள் தேவை என...

1747801591 RAMITH 6
இலங்கைசெய்திகள்

நாகரிகமற்ற செயல்: ரூ. 296 மில்லியன் சொத்துக் குவிப்பு வழக்கில் பிணையில் வந்த கெஹெலியவின் மகன் ரமித் ரம்புக்வெல்ல

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகனும், முன்னாள் தனிப்பட்ட செயலாளருமான ரமித் ரம்புக்வெல்ல, நீதிமன்றத்திற்கு வெளியே...