sunshine coast filling up car
இலங்கைசெய்திகள்

தேவையான எரிபொருளை தாமே கொள்வனவு செய்யலாம்! – விரைவில் அனுமதி

Share

நாட்டின் பொருளாதாரத்துக்கு பங்காளிக்கும் தெரிவுசெய்யப்பட்ட விசேட துறைகள், தமக்கு தேவையான எரிபொருளை தாமே நாட்டுக்கு இறக்குமதி செய்ய முடியும்.

இதற்கான அனுமதிப்பத்திரம் வழங்குவது தொடர்பில் விரைவில் தீர்மானம் எடுக்கப்படவுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, தெரிவுசெய்யப்பட்ட பொருளாதார துறையினருக்கு பெற்றோலியப் பொருட்கள் இறக்குமதிக்கான அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கு ஏற்ற வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

இதன்படி, 2002 ஆம் ஆண்டின் 33 ஆம் இலக்க பெற்றோலிய உற்பத்திப் பொருட்கள் (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தைத் திருத்தம் செய்வதற்காக சட்டமூலம் தயாரிக்கப்படவுள்ளது.

இந்த சட்டமூலத்தை தயாரிக்குமாறு சட்டவரைஞருக்கு ஆலோசனை வழங்குவதற்காக எரிசக்தி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
202104130023062602 Bribery SECVPF
செய்திகள்இலங்கை

அரச பதவிகளுக்கு கையூட்டு கோரிய முன்னாள் பிரதியமைச்சர் பணியாளர் உட்பட இருவர் கைது!

அரச பதவிகளுக்கு கையூட்டல் கேட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பாக இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கையூட்டல் ஒழிப்பு...

25 68e368cf08698
செய்திகள்இலங்கை

இலங்கையில் திருமணங்கள் குறைவு: 2024 இல் 12,066 திருமணப் பதிவுகள் சரிவு!

கடந்த ஆண்டில் (2024) நாட்டில் திருமணங்களின் எண்ணிக்கை பன்னிரண்டாயிரத்து அறுபத்தாறு (12,066) குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்கள்...

25 68fb332553beb
செய்திகள்இலங்கை

மிதிகம லசா கொலைச் சூத்திரதாரி: இராணுவத்தில் தப்பிச் சென்ற சிப்பாய்க்கு வழங்கப்பட்ட ஒப்பந்தம் – விசாரணையில் வெளியான அதிர்ச்சி!

வெலிகம பிரதேச சபை தலைவர் லசந்த விக்ரமசேகர அல்லது மிதிகம லசாவின் கொலை தொடர்பாக நடந்து...

25 68fb438418a4b
செய்திகள்இலங்கை

“என் உயிருக்கு ஆபத்து”: தனக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக எதிர்க்கட்சி உறுப்பினர் நாடாளுமன்றத்தில் பரபரப்பு குற்றச்சாட்டு!

எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் விதான தனக்குக் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாகவும் தனது உயிருக்கு ஆபத்து...