5 6
அரசியல்இலங்கைசெய்திகள்

ராஜபக்ச குடும்பத்திற்குள் வெடித்தது மோதல்: ரணிலுக்கு பெருகும் ஆதரவு

Share

ராஜபக்ச குடும்பத்திற்குள் வெடித்தது மோதல்: ரணிலுக்கு பெருகும் ஆதரவு

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை அழித்தது போன்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ராஜபக்ச குடும்பத்தையும் அழித்துள்ளார் என ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கை தூதுவர் உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார்.

இணைய சேனலொன்றில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் ராஜபக்ச குடும்பத்திற்குள் பல்வேறு மோதல்கள் வெடித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

பசில் ராஜபக்சவும் நாமல் ராஜபக்சவும் ஒரே பக்கம் இருப்பதாகவும், யோஷித ராஜபக்ச மற்றும் ரோஹித ராஜபக்ச ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பக்கம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்க ராஜபக்ச குடும்பத்தின் மூத்த உறுப்பினர் ஒருவர் தயாராக இருப்பதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

தற்போது ராஜபக்சவின் வருகை பொருத்தமானதல்ல, எனவே சுதந்திரமாக செயற்படுமாறு ரணில் விக்ரமசிங்கவிற்கு அறிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
Sri Lanka Landslide Deaths
இலங்கை

நாவலப்பிட்டி பகுதியில் மண்மேடு சரிந்து விழுந்ததில் ஒருவர் பலி!

நாவலப்பிட்டி, சோலன்கந்தை பகுதியில் மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் 65 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ...

Landslide
இலங்கை

ஹட்டனில் வீட்டின்மேல் சரிந்த மண்மேடு – காணாமல் போனவர்களை தேடும்பணி தீவிரம்.

ஹட்டன் பொல்பிட்டிய பகுதியில் வீடு ஒன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் 4 பேர் காணாமல்...

Gotabaya Rajapaksa 24
இலங்கை

கோட்டாபய ராஜபக்ஷ தாக்கல் செய்த மனு மீதான உத்தரவு.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்கு அமைய,...

Cyclone
இலங்கை

பசுபிக் பெருங்கடலில் உருவாகி வரும் சூறாவளி – வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள தகவல்.

நாளைய தினம் நண்பகல் முதல், தற்போது நிலவும் மழை நிலைமையானது சிறிதளவு குறைவடையுமென எதிர்பார்க்க முடியும்...