6 7
இலங்கைசெய்திகள்

ரணிலுடன் இணைந்தவர்கள் மீண்டும் வருவார்கள் : மொட்டுக்கட்சி பகிரங்கம்

Share

ரணிலுடன் இணைந்தவர்கள் மீண்டும் வருவார்கள் : மொட்டுக்கட்சி பகிரங்கம்

ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் விரைவில், கைகளை உயர்த்தியப்படி மீண்டும் வருவார்கள் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ (Johnston Fernando) தெரிவித்துள்ளார்.

தற்போதைய தீர்மானம் எடுத்தவர்களுக்கு நல்ல அரசியல் பாடம் புகட்டப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில் கட்சியின் பெரும்பான்மையான நாடாளுமன்ற உறுப்பினர்களும் வாக்காளர்களும் மகிந்த ராஜபக்சவுடன் இருப்பதாக அவர் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.

வெற்றி வேட்பாளரை முன்வைக்கும் ஒரே அரசியல் கட்சியாக பொதுஜன பெரமுன இருக்கும். அந்த வேட்பாளரின் அறிவிப்பு நாளை (7) வெளியிடப்படும்.

ஏனைய கட்சிகள் முன்வைத்த, அனைத்து வேட்பாளர்களும் பழையவர்கள் மற்றும் தேர்தலில் தோல்வியடைந்தவர்கள் என்றும் பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்

இதேவேளை முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச திரைக்குப் பின்னால் இருந்து அனைத்தையும் கட்டுப்படுத்தும் நபர் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
Arrested With
இலங்கை

கைது செய்யப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதேச சபை உறுப்பினர்.

ஐக்கிய மக்கள் சக்தியின் அம்பலங்கொட பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் காலி மாவட்ட குற்றப்பிரிவினரால் கைது...

Weapons
இலங்கை

சிறைச்சாலைக்குள் கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் – தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட தேங்காய்கள்.

நீர்கொழும்பு சிறையில் நடந்த மோதலின் போது கைதிகள் அதிகாரிகளைத் தாக்கப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் கூர்மையான ஆயுதங்களின்...

ravi karunanayake cry 1
இலங்கை

ரவி கருணநாயக்கவிற்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பாணை.

  இலஞ்சம் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இம் மாதம் 17ஆம் திகதி முன்னிலையாகுமாறு, கொழும்பு மாவட்ட...

penson
இலங்கை

வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி தகவல்.

  வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களுக்காக புதிய ஓய்வூதியத் திட்டத்தை விரைவாகத் தயாரிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக...