Hegelia Rambukkala
இலங்கைசெய்திகள்

ஊரடங்குச் சட்டம் நீக்கப்படுமா? – 30ம் திகதி இறுதித் தீர்மானம்

Share

நாட்டில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தை கடுமையான கட்டுப்பாடுகளுடன் ஒக்ரோபர் முதலாம் திகதி திறப்பதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

அத்துடன் இதன்போது கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாகவும், இது தொடர்பான தீர்மானம் இம்மாதம் 30 ஆம் திகதி எடுக்கப்படும்.

சுகாதார அமைச்சர் ஹெகலிய ரம்புக்கெல இதனை தெரிவித்துள்ளார்.

நாட்டில் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தை நீக்கும் போது மக்கள் முறையான சுகாதார விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் எனவும் அவ்வாறு செய்வதன் மூலம் கொரோனா பரவலை வெற்றிகரமாக ஒழிக்க முடியும் எனவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போதைய நிலைமையை அவதானிக்கும் கொரோனா ஓரளவு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு சாதகமான சூழல் ஏற்பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது.

அத்துடன் பெருமளவு தடுப்பூசி வழங்கிய நாடுகள் பட்டியலில் இலங்கை முதல் 10 நாடுகளுள் இடம்பிடித்துள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered 12
இலங்கைசெய்திகள்

கந்தளாய் சூரியபுர பகுதியில் லொறி விபத்து

கந்தளாய் சூரியபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சமகிபுர பகுதியில் ஒரு லொறி வீதியை விட்டு விலகி ஆற்றில்...

Untitled 1 Recovered Recovered 11
இலங்கைசெய்திகள்

கொழும்பில் நாளை முதல் நடைமுறைக்கு வரவுள்ள விசேட போக்குவரத்து திட்டம்!

போரா மாநாட்டை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். போரா மாநாடு...

Untitled 1 Recovered Recovered 9
இலங்கைசெய்திகள்

அதிகரிப்பைப் பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அதன்படி, இன்றையதினம்(24)...

Untitled 1 Recovered Recovered 8
இலங்கைசெய்திகள்

திடீரென இஸ்ரேலை எச்சரித்த ட்ரம்ப்!

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தக்கூடாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்....