black fungus
இலங்கைசெய்திகள்

கறுப்பு பூஞ்சை பரவலாக அடையாளம்!

Share

கறுப்பு பூஞ்சை பரவலாக அடையாளம்!

நாட்டில் பரவலாக, கரும் பூஞ்சை நோய் தாக்கிய கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என சுகாதார அமைச்சால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமந்த ஹேரத் இதனைத் தெரிவித்துள்ளார்.

தற்போது நாட்டில் கொழும்பு தேசிய மருத்துவமனை, குருநாகல் மற்றும் இரத்தினபுரி ஆகிய இடங்களில் கறுப்பு பூஞ்சை நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர்.

இதற்கு முன்னரும் நாட்டில் கறுப்பு பூஞ்சை நோயுடன் சிலர் அடையாளம் காணப்பட்டிருப்பினும் இந்த நோய் கொரோனா நோயாளர்கள் மத்தியில் அடையாளம் காணப்பட்டிருக்கவில்லை.

ஆனால் தற்போது கொரோனா நோயாளர்கள் சிலரும் கறுப்பு பூஞ்சை நோயுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

உடலில் நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமடையும்போது இந்த நோய் அவர்களைத் தாக்குகிறது. உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மற்றும் தொற்று அல்லாத நோய் உள்ளவர்களுக்கும் இது உருவாக வாய்ப்பு உள்ளது .

முகத்தில் அல்லது உடலில் ஏதேனும் வித்தியாசமான பருக்கள் மற்றும் அடையாளங்கள் ஏற்படின் உடனடியாக வைத்தியரை அணுகவேண்டும். மருத்துவ ஆலோசனை இன்றி மருந்து பொருள்களை பெற்றுக்கொள்ளக்கூடாது.

எவ்வாறிருப்பினும் இந்த கருப்பு பூஞ்சைத் தொற்று ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவும் அபாயம் இல்லை – என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Muthur
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மாவிலாறு அணைக்கட்டு உடைந்ததால் வெள்ளம்: திருகோணமலை-மட்டக்களப்பு வீதி மூழ்கியது; 309 பேர் வான்வழியாக மீட்பு!

அதிக மழைவீழ்ச்சி காரணமாக நிரம்பி வழிந்த திருகோணமலை மாவிலாறு அணைக்கட்டின் ஒரு பகுதி நேற்று (நவம்பர்...

images 14
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாயாறு பிரதான பாலம் உடைந்தது: முல்லைத்தீவிலிருந்து மணலாறு, திருகோணமலை போக்குவரத்து முற்றாகத் தடை!

நாட்டில் தொடர்ந்து நிலவி வரும் வெள்ளப் பெருக்கு காரணமாக, முல்லைத்தீவில் உள்ள நாயாறு பிரதான பாலம்...

images 13
செய்திகள்இலங்கை

வெள்ளம் பாதித்த பகுதிகளில் ‘கொதித்தாறிய நீரை’ மட்டுமே அருந்தவும்: சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை!

வெள்ளம் பாதித்த பகுதிகளில் உள்ள மக்கள் குடிநீரைப் பயன்படுத்துவதில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும் என்று...

img 692c75999ccf8
செய்திகள்இலங்கை

ஹெலிகொப்டர் விபத்தில் விங் கமாண்டர் நிர்மால் சியம்பலாபிட்டிய உயிரிழப்பு: விமானப்படை இரங்கல்!

சீரற்ற வானிலை காரணமாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை விநியோகிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தபோது, வென்னப்புவ, லுணுவில...