gamini lokuge
இலங்கைஅரசியல்செய்திகள்

சுசில் பிரேமஜயந்தவை பதவி நீக்கியது ஏன்? – காமினி கூறிய உண்மை

Share

சுசில் பிரேமஜயந்த ஏன் பதவி நீக்கப்பட்டார் என்பது எனக்கு தெரியாது. அடுத்த அமைச்சரவைக் கூட்டம் அல்லது ஆளுங்கட்சி நாடாளுமன்றக்குழுக் கூட்டத்தில் இது பற்றி கேட்டறிந்து அறியத்தருகின்றேன்.” – என்று அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்தார்.

மொட்டு கட்சி தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது,

இராஜாங்க அமைச்சு பதவியில் இருந்து சுசில் பிரேமஜயந்த ஏன் நீக்கப்பட்டார் என்பது தொடர்பில் வினவியபோதே அவர் இவ்வாறு கூறினார்.

” இந்த ஊடக சந்திப்புக்கு வரும் வழியில் எனக்கு வந்த குறுந்தகவல்மூலம்தான் விடயத்தை அறிந்தேன். எதற்காக அவர் பதவி நீக்கப்பட்டார் என்பது எனக்கு தெரியாது. இது பற்றி ஆராய்ந்து பார்க்கின்றேன்.

அரசில் இருந்தால் கூட்டு பொறுப்பு இருக்க வேண்டும். அரசை பாதுகாக்க வேண்டும். கூட்டு பொறுப்பை மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி அண்மையில் எச்சரித்திருந்தார். ” – என்றார் அமைச்சர் காமினி லொக்குகே.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
வீட்டிலிருந்து மீட்கப்பட்ட சடலங்கள் 1
இலங்கை

விசாரணை கைதிகளாக இருந்த 552 பேர் மரணம் – சிறைச்சாலைகள் திணைக்களம் சமர்ப்பித்துள்ள அறிக்கை.

கடந்த ஐந்து ஆண்டுகளில் 1021 சிறைக் கைதிகள் உயிரிழந்துள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களத்தால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில்...

Court order
இலங்கை

ரகித ராஜபக்சவிற்கு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு.

ரகித ராஜபக்ச உள்ளிட்ட குழுவினரை பிணையில் செல்ல கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது....

esala
இலங்கை

கலாசார நிகழ்வுகளில் பாதாள உலக கும்பலின் தலையீடுகள்.

இன்றைய தினம், வரலாற்றுச் சிறப்புமிக்க தெவிநுவர ஸ்ரீ உத்பலவர்ண ஸ்ரீ விஷ்ணு மகா தேவாலயத்தின் வருடாந்த...

Arrested With 1
இலங்கை

பல குற்றச்செயல்களுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது.

  மேல் மாகாணத்தில் இடம்பெற்ற கொலை முயற்சி மற்றும் துப்பாக்கியைக் காட்டி அச்சுறுத்தி மிரட்டிய சம்பவங்கள்...