கோட்டாபய
இலங்கைஅரசியல்செய்திகள்

அரசை விமர்சிப்பவர்களுக்கு அமைச்சுப் பதவி எதற்கு? – கோட்டா சீற்றம்

Share

“அரசை விமர்சிப்பவர்களுக்கு அமைச்சுப் பதவி எதற்கு? அமைச்சரவையிலிருந்து இருந்துகொண்டு அரசை விமர்சிப்பவர்கள் ஒன்றில் தாமாக வெளியேற வேண்டும். இல்லையேல் எனக்குள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி அவர்களை நானே வெளியேற்றுவேன்.”

-இவ்வாறு கடும் தொனியில் எச்சரிக்கையுடன் வலியுறுத்தியுள்ளார் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச.

அரசின் சிரேஷ்ட அமைச்சர்களுடன் நேற்று நடத்திய அவசர கலந்துரையாடலின்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறினார்.

இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“நான் 69 இலட்சம் மக்களின் ஆணையுடன்தான் ஆட்சி அதிகாரத்தைக் கையில் எடுத்தேன். எனக்கு ஆணை வழங்கிய மக்களை ஏமாற்றவும் மாட்டேன்; அவர்களுக்குத் துரோகம் செய்யவும் மாட்டேன்.

நாடு இன்று பொருளாதார ரீதியில் பெரும் சவால்களை எதிர்நோக்கியுள்ளது. இந்நிலையில், அமைச்சரவையில் இருக்கும் சிலர், பொறுப்பிழந்து, பதவி என்ற ஒன்றை மறந்து கீழ்த்தரமாகச் செயற்படுகின்றனர். அரசைக் கண்டபடி விமர்சிக்கின்றனர். இவர்களுக்கெல்லாம் அமைச்சுப் பதவி எதற்கு?

அரசை வீழ்த்துவதுதான் இவர்களின் நோக்கமாக இருந்தால் அது ஒருபோதும் சாத்தியமாகாது. எமது அரசை எவராலும் அசைக்கவே முடியாது” – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
FB IMG 1768978130584 1024x675 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அதிர்ச்சித் தகவல்: கொழும்பு பேருந்து ஓட்டுநர்களில் 60% பேர் போதைப்பொருள் பாவனைக்கு அடிமை? – அமைச்சர் பிமல் ரத்நாயக்க எச்சரிக்கை!

கொழும்பு மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் பயணிகள் போக்குவரத்து சேவையில் ஈடுபடும் ஓட்டுநர்களில் சுமார் 60...

24 66f87c7462569
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையின் கல்வித்துறையில் டிஜிட்டல் புரட்சி: பாதுகாப்பான ஸ்மார்ட் வகுப்பறைகளை உருவாக்க பிரதமர் ஹரிணி திட்டம்!

இலங்கையின் கல்வித்துறையை நவீன தொழில்நுட்பத்தின் ஊடாக அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வதாகவும், மாணவர்களின்பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில்...

grok
செய்திகள்உலகம்

எக்ஸ் தளத்தின் Grok AI மீது ஐரோப்பிய ஒன்றியம் அதிரடி விசாரணை: சிறுவர்களின் புகைப்படங்களைத் தவறாகப் பயன்படுத்தியதாகக் குற்றச்சாட்டு!

ஈலோன் மஸ்க்கிற்குச் சொந்தமான ‘எக்ஸ்’ (X) தளத்தின் செயற்கை நுண்ணறிவு மென்பொருளான ‘Grok’, பெண்கள் மற்றும்...

1764736123 DITWAH 6
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சூறாவளி நிவாரணப் பணிகள் நிறைவடையும் தருவாய்: 4 இலட்சத்திற்கும் அதிகமான வீடுகளுக்குச் சுத்திகரிப்புக் கொடுப்பனவு வழங்கல்!

சூறாவளியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நஷ்டஈடு மற்றும் நிவாரண உதவிகள் வழங்கும் செயல்முறை தற்போது நிறைவடையும் தருவாயில்...