275053470 619463589551506 7713850466088779799 n
அரசியல்இலங்கைசெய்திகள்

யாழ்.ஒருங்கிணைப்புக்குழுவில் புதிய நியமனங்கள் இல்லை !!!

Share

யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுவில் புதிய நியமனங்கள் எவையும் வழங்கப்படவில்லை என யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு இணைத்தலைவருமாகிய அங்கஜன் இராமநாதன் விளக்கமளித்துள்ளார்.

தனது உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தினூடாகவே இதனை வெளிப்படுத்தியுள்ளார். இது தொடர்பில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் கலந்து கொள்வதற்கான பிரதமர் அலுவலக பிரதிநிதி ஒருவரின் பெயர் பரிந்துரை மாத்திரமே இடம் பெற்றுள்ளது என்பதையும் அது தொடர்பான கடிதம் நமக்கு கிடைத்துள்ளது என்பதையும் தெளிவு படுத்துகிறோம்

எனவே யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவில் புதிய நியமனம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக வெளியாகிய செய்திகள் அனைத்தும் உண்மைக்குப் புறம்பானவை.

அத்தோடு யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருக்கு எதிரான முறைப்பாடுகள் பிரதமர் அலுவலகத்திற்கு கிடைத்துள்ளன என்ற செய்தி அறிக்கையிடல்களும் போலியானவை.

ஒருசில சுயலாப ஊடகவியலாளர்களால் திட்டமிட்டு பரப்பப்படும் செய்திகளை ஏனைய ஊடகங்களும் ஊடகவியலாளர்களும் பிரசுரிப்பது அவர்களின் ஊடகத்துக்கு விரோதமான செயலாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு தலைவருக்கெதிராக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் இதற்கமைய பிரதமர் அலுவலக பிரதிநிதியாக காசிலிங்கம் கீதநாத் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியிடப்பட்ருந்தன.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 53
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வெல்லம்பிட்டியில் 4 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் மீட்பு: இருவர் கைது

கொழும்பு, வெல்லம்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் (PNB) நேற்று (மே...

world 52
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொழும்பில் பிடிபட்ட 74 வியட்நாமியர்களுக்கு மே 14 வரை விளக்கமறியல்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு

கொழும்பு, கொள்ளுப்பிட்டி பகுதியில் உள்ள உத்தராநந்த மாவத்தையில் அமைந்துள்ள குடியிருப்பு வளாகம் ஒன்றில் வைத்து, இணையவழி...

world 51
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஊழலுக்கு எதிராகக் குரல் கொடுத்துப் பதவி விலகிய NPP உறுப்பினர்: ராஜினாமா கடிதம் கசிந்த விவகாரத்தில் சர்ச்சை

தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சியின் குருநாகல் மாநகர சபை உறுப்பினர் பி.டபிள்யூ. பிரேமச்சந்திரா, தனது...

world 50
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தோல் புற்றுநோய் அபாயம்: காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை அவதானம் தேவை

இலங்கையில் தோல் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகச் சுகாதார மேம்பாட்டுப் பணியகம் எச்சரிக்கை விடுத்துள்ளது....