download 12
அரசியல்இலங்கைசெய்திகள்

போராட்ட களத்தில் மேற்கொள்ளப்பட்ட மனிதாபிமானமற்ற தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கிறோம்! – சுதந்திர ஊடக இயக்கம்

Share

ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டு 24 மணித்தியாலங்கள் கூட கடப்பதற்கு முன், இன்று (22.07.2022) அதிகாலைக் காலிமுகத்திடல் போராட்டக்களத்தில் பாதுகாப்புப் படையினர் நடத்திய மனிதாபிமானமற்ற மற்றும் அருவருப்பான தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கிறோம் என ச் சுதந்திர ஊடக இயக்கம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,

குறித்த சம்பவங்களைத் அறிக்கையிட்டுக் கொண்டிருந்த உள்ளூர் மற்றும் வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் மற்றும் சமூக ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டுள்ளதுடன்இ அவர்களது கமெரா உபகரணங்களும் சேதப்படுத்தப்பட்டுள்ளன. ஊடகவியலாளர்கள்மீது நடாத்தப்பட்ட தாக்குதல்கள் மற்றும் சேதங்கள் குறித்த முழுமையான தகவல்கள் இன்னும் கிடைக்கப் பெறவில்லை.

காலிமுகத்திடல் போராட்டக்களத்திற்கு நுழையும் அனைத்து வீதிகளும் அடைக்கப்பட்டுள்ளதால்இ இன்று காலையில் கூட ஊடகவியலாளர்களுக்கு உள்ளே செல்ல முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மதகுருமார்கள், பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளி சமூகத்தினர் மீதும் ராணுவத்தினர் கொடூரமாகத் தாக்குதல் நடத்தியதாகவும் தாக்குதலில் ஏராளமானோர் காயமடைந்துள்ளதாகவும் காயமடைந்தவர்களை சிகிச்சைக்காகக் கொண்டு செல்வதை கூட பாதுகாப்புப் படையினர் தடுத்துவருவதாகவும் போராட்டப் பகுதியில் இருந்த ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

சட்டத்தரணி நுவன் போபகே உட்பட பலர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும்இ அவர்கள் தொடர்பான மேலதிக தகவல்களைப் பெறுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஜனாதிபதி செயலக வளாகத்தை விட்டு வெளியேறப்போவதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் பகிரங்கமாக அறிவித்திருந்த நிலையிலேயே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இது போன்ற ஆயுதப் படைகளைப் பிரயோகிப்பதற்கான எவ்வித தேவைப்பாடும் காணப்படவில்லை என்பது தெளிவான விடயமாகும். மேலும் இது இலங்கை எதிர்கொண்டுள்ள துரதிஷ்டவசமான தலைவிதியை மேலும் மோசமாக்கும் ஒரு முட்டாள் செயலாகும்.

இந்தத் தாக்குதல் குடிமக்களின் அமைதியான முறையில் போராட்டம் மேற்கொள்ளும் உரிமை, கருத்துக்களை வெளியிடும் உரிமை, சித்திரவதை மற்றும் மனிதாபிமானமற்ற கோரமான இம்சைகளிலிருந்து விடுபடுவதற்கான உரிமை, பத்திரிகையாளர்கள் தங்கள் தொழிலில் ஈடுபடும் உரிமை உள்ளிட்ட அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக வலுவாக வலியுறுத்திக்கொள்ளும் சுதந்திர ஊடக இயக்கம். ஊடக சமூகம் மற்றும் வழக்கறிஞர் சமூகத்துடன் இணைந்து இது தொடர்பாக மேற்கொள்ள முடியுமான அனைத்து சட்ட நடவடிக்கைகளையும் மேற்கொள்ளத் தயங்கபோவதில்லை என்று தெரிவித்துக்கொள்கின்றது – என்றுள்ளது.

#SriLankanews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
india 17
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் பயணித்த அனைவரும் பலி

பாகிஸ்தான் ராணுவத்திற்குச் சொந்தமான ‘Mi-17’ ரக ஹெலிகாப்டர் ஒன்று, பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழுள்ள காஷ்மீரின் முசாபராபாத்...

india 16
உலகம்செய்திகள்

சூரியப் புயல்களில் இருந்து பூமியைப் பாதுகாக்க விண்வெளியில் செயற்கை பிளாஸ்மா கவசம்: விஞ்ஞானிகள் புதிய திட்டம்

சூரியனில் இருந்து வெளியாகும் சக்திவாய்ந்த சூரியப் புயல்கள் (Solar Storms) மற்றும் புவிக்காந்தப் புயல்களினால் பூமியில்...

india 15
உலகம்செய்திகள்

போலி உரிமம் மூலம் 17 ஆண்டுகள் பயணிகள் விமானத்தை இயக்கிய ஏர் கனடா கேப்டன் கைது

ஏர் கனடா (Air Canada) விமான சேவை நிறுவனத்தில் போலி உரிம ஆவணங்களைப் பயன்படுத்தி, சுமார்...

india 13
அரசியல்இலங்கைசெய்திகள்

சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் குறித்து முறையான விசாரணை: நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஆனந்த விஜேபால உறுதி

கடந்த காலங்களில் நாட்டில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் மக்கள் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவங்கள் உள்ளிட்ட...