கொழும்பு! உயரமான கட்டடங்களுக்கு பேராபத்து!
இலங்கைசெய்திகள்

கொழும்பில் உயரமான கட்டடங்களுக்கு பேராபத்து

Share

கொழும்பு! உயரமான கட்டடங்களுக்கு பேராபத்து!

இலங்கைக்கு அருகில் ஏற்பட்ட நிலநடுக்கங்களால் கொழும்பில் உள்ள பாரிய, மற்றும் உயரமான கட்டடங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியர் அதுல சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

இலங்கையில் தென்கிழக்கு கடற்பகுதியில் அண்மையில் ஏற்பட்ட நிலநடுக்கம் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே பேராசிரியர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர்,

“நேற்று, தென்கிழக்கு கடற்பகுதியில், குறிப்பாக கொழும்பு பகுதியில் ஏற்பட்ட அதிர்வை இலங்கையின் பல பகுதிகள் உணர்ந்தன.மேற்கு மாகாணம் இந்த அதிர்வை உணர்ந்தது.

அதாவது தென்கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்ட அதிர்வுகள் காரணமாக மேற்கு மாகாணத்தில் உள்ள உயரமான கட்டடங்கள் கண்டிப்பாக பாதிக்கப்படலாம். அந்த பகுதிகளில் உயரமான கட்டடங்கள் தீங்கு விளைவிக்கும்.

எனவே நாம் செய்ய வேண்டிய ஒன்று இலங்கையில் உள்ள புதிய மற்றும் பழைய கட்டடங்களை வகைப்படுத்துவது. குறிப்பாக உயரமான கட்டடங்கள். பூமியின் புவியியல் சூழ்நிலைக்கு ஏற்றவாறு இந்த கட்டடங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளனவா?மேலும், நிலநடுக்கத்தை தாங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளனவா?அந்த கட்டடங்களின் அடித்தளங்கள் சரியான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளனவா?

இது தொடர்பாக ஆராய்ந்த பின்னர் ஆபத்தான கட்டடங்களை அடையாளம் கண்டு, சில சமயங்களில் அவற்றை சரிசெய்ய சில வழிமுறைகள் உள்ளன, சரிசெய்யக்கூடிய கட்டடங்கள் சரி செய்யப்படவேண்டும், சரிசெய்ய முடியாத கட்டடங்கள் அகற்றப்படவேண்டும். அந்த நிலை குறித்து இலங்கை கவனம் செலுத்த வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Shooting 2
இலங்கை

காவல்துறை உத்தியோகத்தரின் மீது துப்பாக்கி பிரயோகம்.

பெலியத்த, வலவல பகுதியில், திக்வெல்ல காவல் நிலையத்தில் கடமைற்றும் காவல்துறை உத்தியோகத்தர் ஒருவரின் வீட்டின் மீது...

dead body 1
இலங்கை

நீரில் மூழ்கிய சிறுவன் சடலமாக மீட்பு.

நேற்று மாலை, கம்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெலிகல்ல – உடோவிட்ட பகுதியில், நான்கு சிறுவர்கள் இணைந்து...

low r 2
இலங்கை

க.பொ.த உயர்தரப் பரீட்சை பிற்போட படுமா? – நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு.

இவ்வருடம் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு முதலாம் மற்றும் இரண்டாம் தடவைகளாகத் தோற்றவுள்ள மாணவர் குழுவொன்றினால் தாக்கல்...

Gotabaya Rajapaksa 2
இலங்கை

சற்றுமுன்னர் நீதிமன்றில் முன்னிலையானார் கோட்டாபய ராஜபக்ச.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் ...