rtjy 283 scaled
இலங்கைசெய்திகள்

இலங்கை விசா தொடர்பில் நடவடிக்கை!

Share

இலங்கை விசா தொடர்பில் நடவடிக்கை!

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தினால் தற்போது வழங்கப்படும் விசா முறைமையை இலகுப்படுத்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

1948ஆம் ஆண்டின் 20ஆம் இலக்க குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டம் மற்றும் அதன் கீழ் வெளியிடப்பட்டுள்ள ஒழுங்குவிதிகளுக்கு அமைய எமது நாட்டிற்கு வருகை தருகின்ற வெளிநாட்டவருக்கு குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தால் வருகை தரு விசா, வதிவிட விசா மற்றும் பயண விசா என 3 வகையான விசாக்கள் வழங்கப்படுகின்றன.

வருகை தரு விசா மற்றும் வதிவிட விசா ஆகிய 2 வகையான விசா முறைமையின் கீழ் வழங்கப்படுகின்ற விசா வகைகளில் காணப்படுகின்ற சிக்கலான தன்மையைக் கருத்தில் கொண்டு அதிகளவிலான வெளிநாட்டவர்களை கவர்ந்திழுக்கின்ற விசா முறைகளை கருத்திலெடுத்து எமது நாட்டில் நடைமுறையில் உள்ள விசா முறையை மீண்டும் மீளாய்வு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய சமகாலத்தில் நிலவுகின்ற விசா முறைகளை மிகவும் இலகுபடுத்துவதற்காக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Share
தொடர்புடையது
லக்ஷ்மன் யாப்பா
இலங்கை

முன்னாள் அமைச்சர் மீது ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு வழக்குத் தாக்கல்!

முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தனவுக்கு எதிராக, வர்த்தகர் ஒருவரிடமிருந்து 10 இலட்சம் ரூபாய் பணத்தை...

nilam 1
இலங்கை

காணி அளவீட்டுக்கு எதிர்ப்பு வெளியிட்டு யாழில் இன்று போராட்டம்.

மருதங்கேணி பிரதேச செயலாளர் பிரிவில் படைத்துறைக்கு 25 ஏக்கர் வரையான காணி சுவீகரிப்பதற்கு எதிராக தற்போது...

crime 09
இலங்கை

பெண் மருத்துவரின் கொலைக்கு காரணம் என்ன? – நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட குற்றவாளிகள்.

தெல்தெனியவில் சடலமாக மீட்கப்பட்ட, பெண் உடலியல் சிகிச்சை நிபுணரின் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நான்கு...

col.uni
இலங்கை

மூடப்படுகிறதா கொழும்பு பல்கலைக்கழகம்?

கொழும்பு பல்கலைக்கழக மாணவர்களுக்கும் டெங்கு காய்ச்சல் பரவியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. நேற்று ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த,...