IMG 20230512 WA0001
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

வவுனியாவில் கவனயீர்ப்பு போராட்டம்!

Share
அரசின் கட்டவிழ்த்து விடப்பட்ட திட்டமிடப்ட்ட  கைதுகள் நிறுத்தப்படவேண்டும் எனவும் வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலய பூசகரது கைதிற்கு எதிர்ப்பு தெரிவித்தும் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால்  நேற்று மாலை 2:30 மணியளவில் வவுனியா நகரில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்து.
இதன் பொழுது திட்டமிட்ட கைதுகளை உடனடியாக நிறுத்து ,வடக்கும் கிழக்கும் தமிழர் தாயகம்,வெடுக்குநாறிமலை எங்கள் சொத்து, தொல்லியல் திணைக்களமே அரசின் கைக்கூலியா,கைது செய்யப்பட்டவர்கள் உடனடியாக விடுதலைசெய்யப்படவேண்டும், திருகோணமலை எங்கள் சொத்து ,அம்பாறை எங்கள் சொத்து , மட்டக்களப்பு எங்கள் சொத்து, யாழ்ப்பாணம் எங்கள் சொத்து, கிளிநொச்சி எங்கள் சொத்து, வவுனியா எங்கள் சொத்து, முல்லைத்தீவு எங்கள் சொத்து, மன்னார் எங்கள் சொத்து,வீரம் விளைந்த தேசம் காக்கிகளின் சலசலப்புக்கு அஞ்சாது, இராணுவமே வெளியேறு,மண்துறந்த புத்தருக்கா மண்மீது ஆசையா என்ற கோஷங்களை எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன் பொழுது யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் உட்பட  வவுனியா மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்டோர் சங்கத்தினர் கலந்து கொண்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.
#srilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Elephant Tusks 1
இலங்கை

யானைத்தந்தங்களுடன் நிலவெளியில் ஒருவர் கைது.

  சட்டவிரோதமான முறையில் யானைத் தந்தங்களை வீட்டில் வைத்திருந்த நபரொருவர் திருகோணமலை- நிலாவெளி பகுதியில் விசேட...

low r 1
இலங்கை

உயர்தர பரீட்சையை ஒத்தி வைக்க கோரிய மனு மீதான உத்தரவு.

எதிர்வரும் நாட்களில் நடைபெறவுள்ள கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை ஒத்திவைத்து உத்தரவிடுமாறு கல்விப் பொதுத்...

are 2 1
இலங்கை

அயலவரை அடித்துக்கொன்ற சந்தேக நபர் கைது.

கடந்த 14ஆம் திகதி இரவு தம்புள்ளை விகாரை சந்தியில் அமைந்துள்ள கடை அறைகளில் தற்காலிகமாக வசித்து...

யோஷித ராஜபக்ஷ
இலங்கை

யோஷித ராஜபக்ஷவிற்கு எதிரான வழக்கு நீதிமன்று பிறப்பித்துள்ள உத்தரவு.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரது பாட்டியான டெய்ஸி ஃபொரஸ்ட்...