செய்திகள்இலங்கை

வடக்கில் 12–19 வயதினருக்கு இன்று முதல் தடுப்பூசி

ஆ.கேதீஸ்வரன்E
Share

வடக்கு மாகாணத்தில் 12– 19 வயதுக்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை இன்று ஆரம்பிக்கப்படும்.

இதனை வடக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

தற்போது நாட்டில் கொவிட் 19 தடுப்பூசி வழங்கும் திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக,

விசேட தேவை மற்றும் நாட்பட்ட நோய்கள் உள்ள 12 –19 வயதினருக்கு கடந்த 24 ஆம் திகதி முதல் வழங்கப்பட்டு வருகின்றது.

சுகாதார அமைச்சின் அடுத்த கட்டமாக, ஒக்ரோபர் 1 முதல் நாடு முழுவதும் உள்ள விசேட தேவை மற்றும் நாட்பட்ட நோய்கள் உள்ள 12–19 வயதினருக்கு தடுப்பூசி வழங்க முடிவு செய்யப்பட்டு்ளளது.

அதன்படி இன்று வடக்கு மாகாணத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளது.

இந்தத் தடுப்பூசியானது சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்புப் பிரிவின் வழிகாட்டல்களுக்கு அமைய,]

குழந்தை நல மருத்துவ நிபுணர் அல்லது பொது வைத்திய நிபுணர் ஒருவரின் பரிந்துரைக்கு அமையவே வழங்கப்படும்.

இதற்கமைய வடக்கு மாகாணத்தில் யாழ்.மாவட்டத்தில்,

யாழ்.போதனா வைத்தியசாலை மற்றும் பருத்தித்துறை, ஊர்காவற்றுறை, தெல்லிப்பழை மற்றும் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைகளிலும் கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் ஆகிய மாவட்டங்களில் மாவட்ட பொது வைத்தியசாலைகளிலும் இந்தத் தடுப்பூசி வழங்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
25 3
இலங்கைசெய்திகள்

உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பது தொடர்பில் பேச்சுவார்த்தை

உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பது தொடர்பில் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்மைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம் என...

22 5
இலங்கைசெய்திகள்

யாழில் ஆலயத்திற்கு அழைத்து வரப்பட்ட யானை மிரண்டதால் இருவர் காயம்

யாழ்ப்பாணத்தில் உள்ள ஆலயம் ஒன்றிற்கு தென்னிலங்கையில் இருந்து அழைத்து வரப்பட்ட யானை மிரண்டதால் இருவர் காயமடைந்த...

21 6
இலங்கைசெய்திகள்

வடக்கு – கிழக்கில் காணிகளை அபகரிக்கும் வர்த்தமானியின் உள்நோக்கம் என்ன.. சிறீதரன் தெரிவிப்பு

வடக்கு – கிழக்கு மாகாணங்களில் உள்ள 5,700 ஏக்கருக்கும் அதிகமான தமிழர்களின் பூர்வீக நிலங்களைச் சுவீகரிப்பதற்காக...

24 4
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபையை கைப்பற்ற பேரம் பேசும் அரசாங்கம்! நாடாளுமன்றில் பகிரங்க குற்றச்சாட்டு

கொழும்பு மாநகர சபையின் அதிகாரத்தை பெற்றுக்கொள்ள பல உறுப்பினர்களுடன் அரசு மில்லியன் கணக்கான ரூபா பேரம்...