1 10
இலங்கைசெய்திகள்

குடும்பத்துடன் நாட்டிலிருந்து வெளியேறிய உத்திக பிரேமரத்ன

Share

குடும்பத்துடன் நாட்டிலிருந்து வெளியேறிய உத்திக பிரேமரத்ன

அனுராதபுரம் மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உத்திக பிரேமரத்ன மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் திட்டமிடப்பட்ட செயல் என பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கனேடிய குடியுரிமையைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

உத்திக பிரேமரத்ன மற்றும் குறித்த பிரதேசத்தின் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரும் இணைந்து இந்த தாக்குதலை திட்டமிட்டுள்ளதாகவும், அதற்குப் பயன்படுத்தப்பட்ட கைத்துப்பாக்கி உதவிப் பொலிஸ் அத்தியட்சகருக்கு பொலிஸ் திணைக்களம் வழங்கிய உத்தியோகபூர்வ கடமை துப்பாக்கி என்றும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த கைத்துப்பாக்கியை அரச ஆய்வாளருக்கு அனுப்பி அறிக்கை பெறுமாறு குற்றப் புலனாய்வுத் துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பிலான அறிக்கை கிடைத்தவுடன் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்படுவார்கள் என குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றில் அறிவித்துள்ளனர்.

எவ்வாறாயினும், உத்திக பிரேமரத்ன தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்துவிட்டு தற்போது தனது குடும்பத்துடன் கனடாவிற்கு சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
image 2025 12 02 093823108
இலங்கைசெய்திகள்

முல்லைத்தீவு கடற்படை வீரர்கள் விபத்து: காணாமல் போன 5 பேரில் ஒருவரின் உடலம் மீட்பு!

அதிதீவிர வானிலைக் காரணமாக முல்லைத்தீவு சாலை முகத்துவாரப் பகுதியில், மணலை அகற்றி விரிவுபடுத்தும் பணியின்போது, கடந்த...

IMG 4676
இலங்கைசெய்திகள்

லுணுவில ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்த விமானிக்கு விடை: பட்டச் சான்றிதழ் பூதவுடலுக்கு சமர்ப்பிப்பு!

அண்மையில் லுணுவில பகுதியில் நிவாரணப் பணிக்காகச் சென்றபோது விபத்துக்குள்ளாகி உயிரிழந்த இலங்கை விமானப்படையின் விங் கமாண்டர்...

25 68663a41415fd
இலங்கைசெய்திகள்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவின் பேரிடர் நிர்வாகத்தை அரசாங்கம் ஆய்வு செய்ய வேண்டும்: நாமல் ராஜபக்ச!

பேரிடர் சூழ்நிலையை நிர்வகிக்க அரசாங்க இயந்திரம் இன்னும் தயாராக இல்லை என்று சுட்டிக்காட்டிய சிறிலங்கா பொதுஜன...

MediaFile 4
இலங்கைசெய்திகள்

வட்டியில்லா மாணவர் கடன்: விண்ணப்பக் காலக்கெடு டிசம்பர் 15 வரை நீடிப்பு!

வட்டியில்லா மாணவர் கடன் திட்டத்தின் 10வது கட்டத்திற்கான விண்ணப்பக் காலக்கெடு 2025.12.15 ஆம் திகதி வரை...