299962422 745741006923763 57982616078712092 n
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

யாழ் மாவட்ட விவசாயத்துக்கான யூரியா உரங்கள் வந்தடைந்தன

Share

யாழ் மாவட்ட 2022/23 பெரும்போக விவசாயத்துக்காக முதல்கட்டமாக 200 தொன் லக்பொஹொர யூரியா உரங்கள் யாழ்ப்பாணத்துக்கு இன்று (16.08.2022) எடுத்துவரப்பட்டுள்ளன.

இவை நெல் மற்றும் சோளப்பயிர்ச்செய்கைக்காக மானிய அடிப்படையில் 1 ஹெக்டயருக்கு 100 கிலோகிராம் என்ற அடிப்படையில் 50 கிலோகிராம் உரப்பொதியொன்று 10,000 ரூபாய் எனும் விலையில் வழங்கப்படவுள்ளன.

யாழ் மாவட்டத்தில் 13,000 ஹெட்டேயர் நெற்பயிர்ச்செய்கை அடையாளப்படுத்தப்பட்டுள்ள நிலையில் 1300 தொன் யூரியா உரம் தேவைப்படுகிறது. இந்நிலையில் முதற்கட்டமாக 200 தொன் யூரியா உரங்கள் இன்று யாழ் மாவட்டத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. மிகுதி உரங்கள் பிரதேச ரீதியாக கமநல சேவைகள் நிலையங்களுக்கு விநியோகிக்கப்படவுள்ளன.

வடமாகாண, யாழ் மாவட்டத்துக்கான 2022/23 பெரும்போகத்துக்கான உரங்களை அனுப்பி வைக்கும் நிகழ்வு விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர தலைமையில் நேற்று (15.08.2022) நடைபெற்றிருந்தது.

40 தொன் வீதம் 5 கொள்கலன்களில் யாழ்ப்பாணம் கோண்டாவில் உரக்களஞ்சியத்துக்கு கொண்டுவரப்பட்ட யூரியா உரங்களை யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளரும், யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான அங்கஜன் இராமநாதன் அவர்கள், கையேற்று, கமநல சேவைகள் நிலைய அதிகாரிகளிடம் கையளித்தார்.

இதேவேளை, வெங்காயம், உருளைக்கிழங்கு உள்ளிட்ட மரக்கறி பயிர்களுக்கான உரங்கள் எதிர்வரும் ஒக்டோபர் மாதமளவில் யாழ் மாவட்டத்துக்கு வழங்க நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

299847675 745740916923772 1603575853204558884 n

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
20 14
இலங்கைசெய்திகள்

அர்ச்சுனாவின் நாடாளுமன்ற உறுப்புரிமை: மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் உத்தரவு

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் பதவியை இரத்து செய்ய உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை...

17 13
இலங்கைசெய்திகள்

நான்கு தமிழ் இளைஞர்கள் பரிதாப மரணம்

புத்தளம் (Puttalam) மாவட்டம், வென்னப்புவ கடலில் மூழ்கி நால்வர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர். மேற்படி நால்வரும் குளித்துக்...

19 13
இலங்கைசெய்திகள்

இறம்பொட கோர விபத்து : 23ஆக உயர்ந்த பலி எண்ணிக்கை

கொத்மலை, ரம்பொட கரண்டியெல்ல பகுதியில் கடந்த 11 ஆம் திகதி நடந்த பேருந்து விபத்தில் படுகாயமடைந்து...

18 13
இலங்கைசெய்திகள்

தங்கத்தின் விலையில் ஏற்பட்ட தலைகீழ் மாற்றம்

கொழும்பு செட்டியார் தெருவில் 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 240,500 ரூபாவாக பதிவாகியுள்ளது. இன்று...