mahinda amaraweera 6756
இலங்கைசெய்திகள்

அடுத்த வாரம் முதல் விவசாயிகளுக்கு யூரியா விநியோகம்!

Share

இந்தியாவிடம் இருந்து கிடைக்கபெறும் யூரியா அடுத்த வரமளவில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவிக்கையில்,

இந்தியாவிடம் இருந்து கிடைக்கபெறும் யூரியா 10,000 ரூபாவுக்கு விவசாயிகளுக்கு வழங்கப்படவுள்ளது.

தற்போது யூரியா மூட்டையொன்றின் விலை சந்தையில் 42 ஆயிரமாக காணப்படுகிறது. இந்த நிலையில், இந்தியாவிடம் இருந்து கிடைக்கப்பெறும் உரத்தை பத்தாயிரம் ரூபாவிற்கு விற்பனை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

65 ஆயிரம் மெற்றிக் தொன் யூரியாவை ஏற்றிய கப்பல் இலங்கை நோக்கி தமது பயணத்தை ஆரம்பித்துள்ளது.

இந்தக் கப்பல் எதிர்வரும் வெள்ளிக்கிழமை இரவு நாட்டை வந்தடையவுள்ளது. எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமையில் இருந்து உரத்தை விநியோகிக்க முடியும் – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...