jaffna univercity
இலங்கைசெய்திகள்

யாழ்.பல்கலை பட்டமளிப்பு – ஒன்லைனில் நடத்த முடிவு

Share

யாழ்.பல்கலை பட்டமளிப்பு – ஒன்லைனில் நடத்த முடிவு

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் 35 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவின் இரண்டாம் பகுதி எதிர்வரும் 16ஆம், 17ஆம் மற்றும் 18ஆம் திகதிகளில் நடைபெறவிருந்தது. இந்த நிலையில் தற்போதைய கொரோனா பெருந்தொற்றின் நிலைமைகளை கருத்தில் கொண்டு இவ் விழாவானது அடுத்த மாதம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அதன்படி அடுத்த மாதம் 7ஆம், 08ஆம், 09ஆம் திகதிகளுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்தத் தகவலை பல்கலைக்கழக துணைவேந்தவர் ஊடகப் பிரிவால் அனுப்பி வைக்கப்பட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்படுகிறது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
தற்போது நாட்டில் பரவலடைந்துவரும் கொரோனா நிலைமைகள் தொடர்பில் ஆராய்ந்து, நாட்டின் சூழ்நிலையை கருத்தில் கொண்டு எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் 7ஆம் திகதி முதல் 09 ஆம் திகதி வரை யாழ். பல்கலைக்கழக உள்ளக விளையாட்டரங்கி நடத்துவது எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எனினும் அப்போதைய சூழ்நிலைகளைப் பொறுத்து குறித்த தினங்களில் பட்டமளிப்பு விழாவைத் திட்டமிட்டபடி பட்டதாரிகளுடன் நடத்த முடியாத நிலைமை ஏற்பட்டால் மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு பட்டமளிப்பு விழாவை ஒன்லைனில் நடத்தி பட்டங்களை உறுதிப்படுத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேலும் பட்டமளிப்பு விழாவை ஒன்லைனில் மாற்றுவது தொடர்பான இறுதித் தீர்மானம் இந்த மாதம் 23 ஆம் திகதி அறிவிக்கப்படும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
சமிந்த குலரத்ன
இலங்கை

பாராளுமன்றத்தின் முன்னாள் பிரதிச் செயலாளர் நாயகம் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலை!

சபாநாயகரினால் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் வாகனங்கள் மற்றும் உத்தியோகபூர்வ இல்லங்களை தவறாகப் பயன்படுத்தியமை தொடர்பான முறைப்பாடு தொடர்பில்...

இலங்கை கடற்பரப்பில் 09 இந்திய மீனவர்கள் கைது
இலங்கை

இலங்கை கடற்பரப்பில் 09 இந்திய மீனவர்கள் கைது.

நேற்று இரவு வேளையில், தலைமன்னார் உருமலை முனைக்கு அப்பால் உள்ள கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடித்துக் கொண்டிருந்த...

எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்
இலங்கை

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையானார் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்!

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில், பாராளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக முன்னிலையாகியுள்ளார்....

liver
இலங்கை

இளம் தலைமுறையினர் மத்தியில் அதிகரித்து வரும் நோய்த்தாக்கம்.

இரைப்பை குடல் மற்றும் கல்லீரல் வைத்திய நிபுணர் சுபுன் குலதுங்க, இளைஞர்கள் மத்தியில் குடல் சார்ந்த...