image 760538e412
இலங்கைசெய்திகள்

ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு வெற்றி: சமூக ஊடகங்களில் பொய்யான விபரங்கள்

Share

ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு வெற்றி: சமூக ஊடகங்களில் பொய்யான விபரங்கள்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் யார் வெற்றியீட்டுவார்கள் என்பது குறித்து ஐக்கிய நாடுகள் அமைப்பு தகவல் வெளியிட்டதாக சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வரும் விபரங்கள் பொய்யானவை என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் அமைப்பின் அதிகாரபூர்வ முகநூல் பக்கத்தில் இந்த விடயம் அறிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணைக்குழுவின் இலங்கைக் கிளையின் கருத்துக் கணிப்பின் அடிப்படையில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளதாக குறித்த சமூக ஊடகப்பதிவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த தகவலின் பிரகாரம் சஜித் பிரேமதாசவின் ஐக்கிய மக்கள் சக்தி முன்னணி வகிக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

மொட்டு கட்சி அடுத்த இடத்தையும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக்கட்சி மூன்றாம் இடத்தையும், நான்காம் இடத்தை அனுர குமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தியும் பெற்றுக்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

தேசிய மக்கள் சக்தியின் வாக்குகள் 339 வீதத்தினால் வளர்ச்சியடையும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

எனினும், ஐக்கிய நாடுகள் அமைப்பு இவ்வாறான ஓர் கருத்துக் கணிப்பை மேற்கொள்ளவில்லை என தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழுவின் இலங்கைக் கிளையினால் இவ்வாறான ஓர் அறிக்கை வெளியிடப்படவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல்களின் போதும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் இலங்கைக் கிளையினால் கருத்து கணிப்பு நடத்தப்பட்டமைக்கான உறுதியான ஆதாரங்கள் எதுவும் கிடையாது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...