20220820 110026 scaled
அரசியல்இலங்கைசெய்திகள்பிராந்தியம்

ஐ.நா ஆசிய பசுபிக் பிராந்திய பிரதிநிதி – யாழ் முதல்வர் சந்திப்பு

Share

ஐக்கிய நாடுகள் சபையின் ஆசிய பசுபிக் பிராந்தியத்தின் பணிப்பாளருக்கும் யாழ்ப்பாண மாநகர சபை முதல்வருக்கும் இடையிலான சந்திப்பு இன்று காலை இடம்பெற்றது.

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள குறித்த குழுவினர் இன்றைய தினம் மாநகர சபை முதல்வரை சந்தித்தவுடன் தற்போது நிலைமைகள் தொடர்பிலும் கேட்டறிந்து கொண்டார்.

குறித்த சந்திப்பின்போது தற்போதைய பொருளாதார நெருக்கடி மற்றும் யுத்தத்தின் பின் நாட்டில் பல சொத்துக்கள் சேதம் ஆக்கப்பட்டமை வெளிநாட்டில் உள்ள புலம்பெயர்ந்தவர்கள் எமது நாட்டிலே முதலீடுகளை கொண்டு வருவதற்கு முன்பே வருகின்ற போதிலும் எமது நாட்டில் உள்ள முரண்பாடான கொள்கைகள் காரணமாக அவர்கள் தமது முதலீட்டை மேற்கொள்ளாத நிலை காணப்பட்டு வருவதாகவும் மாநகர சபை முதல்வர் ஐக்கிய நாடுகள் சபையின் பணிப்பாளரிடம் தெரிவித்ததாக குறிப்பிட்டார்.

மேலும் தற்போது ஆட்சியிலுள்ள ஜனாதிபதி பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்க வேண்டும் எனவும் குறித்த ஜனாதிபதி பிரதமராக பதவி வகித்த காலப் பகுதியிலே ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டத்துடன் பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குவதற்கு ஆதரவு தெரிவித்த நிலையில் தற்போது பயங்கரவாத தடை சட்டத்தினை நடைமுறையில் வைத்திருப்பதனை ஏற்றுக் கொள்ள முடியாது என்னும் விடயத்தையும் குறித்த பிரதிநிதிகளிடம் தெரிவித்ததாக குறிப்பிட்டார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
16 2
இலங்கைசெய்திகள்

திடீரென்று பதவி விலகிய பிரான்ஸ் ஜனாதிபதி

பிரான்ஸ் பிரதமர் செபாஸ்டியன் லெகோர்னு (Sébastien Lecornu) தனது பதவியை விட்டு விலகியுள்ளார். பிரேன்கொய்ஸ் பெய்ரூவின்...

17 2
இலங்கைசெய்திகள்

வெளிநாட்டிலிருந்து இலங்கை திரும்பியவர் விமான நிலையத்தில் கைது

வெளிநாட்டு சிகரெட்டுகளை நாட்டிற்குள் சட்டவிரோதமாக கொண்டுவந்த ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப்...

18 2
இலங்கைசெய்திகள்

இலங்கையில் திருமணம் செய்துகொள்பவர்களின் எண்ணிக்கையில் மாற்றம்

2020 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2024 ஆம் ஆண்டில் நாட்டில் பிறப்புகளின் எண்ணிக்கை 80,945 குறைந்துள்ளதாக...

19 1
இலங்கைசெய்திகள்

மத நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்ற மூன்று பெண்கள் கோர விபத்தில் பலி

கம்பளை, டோலுவ பகுதியில் இடம்பெற்ற விபத்தில் மூன்று பெண்கள் உயிரிழந்துள்ளதுடன், மற்றொரு பெண் காயமடைந்துள்ளார். சாலையைக்...