மார்பகப் புற்றுநோயால் scaled
இலங்கைசெய்திகள்

இலங்கையில் புற்றுநோயால் மணிக்கு இருவர் உயிரிழப்பு!

Share

இலங்கையில் ஒரு மணித்தியாலயத்துக்கு 4 புதிய புற்றுநோயாளர்கள் இனங்காணப்படுகின்றனர்.

அத்துடன் இரு மார்பக புற்றுநோயாளர்கள் உயிரிழக்கின்றனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இதனை புற்றுநோய் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் ஜானகி விதான பத்திரண தெரிவித்துள்ளார்.

ஒக்ரோபர் முதலாம் திகதி முதல் ஒக்ரோபர் 31ஆம் திகதி வரை மார்பகப் புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வு காலமாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

அதற்கமைய ‘நாட்டில் முன்னரே அறிந்து உயிரைப் பாதுகாப்போம்’ எனும் தொனிப்பொருளின் கீழ் விழிப்புணர்வு வேலைத்திட்டம் மேற்கொள்ளப்படவுள்ளது.

இலங்கையில் மணித்தியாலத்துக்கு 4 புதிய மார்பகப் புற்றுநோயாளர்கள் இனங்காணப்படுவதோடு இருவர் உயிரிழக்கின்றனர்.

மார்பகப் புற்றுநோய் ஆண், பெண் என இருவரையும் தாக்கக்கூடியது. ஆனால் இதில் 100 வீத அபாயத்துக்கு உள்ளாகக் கூடியவர்கள் பெண்கள் ஆவார்.

இதனை ஆரம்பத்தில் கண்டறிந்து சிகிச்சை வழங்குவதன் மூலம் குணப்படுத்த முடியும் எனவும் 20 வயதுக்கு மேற்பட்ட சகல பெண்களும் மார்பகப் புற்றுநோய் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
20 18
செய்திகள்இலங்கைபிராந்தியம்

காலி சிறைச்சாலைக்குள் போதைப்பொருள் வீசும் முயற்சி முறியடிப்பு: இளைஞர் ஒருவர் கைது!

காலி சிறைச்சாலையின் பாதுகாப்பை மீறி, அதன் மதிலுக்கு மேலால் போதைப்பொருள் மற்றும் தடைசெய்யப்பட்ட பொருட்களை உள்ளே...

19 16
செய்திகள்விளையாட்டு

92 ஆவது “புனிதர்களின் சமர்” கிரிக்கெட் போட்டி: வெற்றியின்றிச் சமநிலையில் நிறைவு!

கொழும்பு புனித ஜோசப் கல்லூரி மற்றும் பம்பலப்பிட்டி புனித பீட்டர்ஸ் கல்லூரி அணிகளுக்கு இடையிலான வரலாற்றுச்...

18 17
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நெலுவ மாதுகெட்ட பகுதியில் கிங் கங்கையில் சடலம் மீட்பு: பொலிஸார் விசாரணை!

காலி மாவட்டம், நெலுவ – மாதுகெட்ட பகுதியில் பாயும் கிங் கங்கையில் (Gin Ganga) மிதந்தவாறு...

17 18
செய்திகள்உலகம்

ஈரானின் நடன்ஸ் அணுசக்தி நிலையம் மீது மீண்டும் தாக்குதல்: சர்வதேச விதிகள் மீறப்பட்டுள்ளதாக ஈரான் குற்றச்சாட்டு!

ஈரானின் மிக முக்கியமான மற்றும் பிரதான அணுசக்தி நிலையங்களில் ஒன்றான நடன்ஸ் (Natanz) மீது மீண்டும்...