goat scaled
செய்திகள்இலங்கை

ஆடு துஷ்பிரயோகம் – பிரான்ஸில் இலங்கையர் கைது!

Share

பிரான்சில் விலங்குகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததற்காக இலங்கை தமிழர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த நபர் ஆடு ஒன்றினை மூன்று முறை பாலியல் துஷ்பிரயோகம்  செய்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் 53 வயதான இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 27ம் திகதி அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இது குறித்த விசாரணைகளுக்கு டிசம்பர் 23ம் திகதி நீதிமன்றுக்கு அழைக்கப்பட்டுள்ளதாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

பிரான்ஸ் – டூரிஸ் on Île Honoré de Balzac தீவில் வளர்ப்பு ஆடுகளை குறித்த நபர்  துஷ்பிரயோகம் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஒரே ஆட்டினை குறித்த நபர் மூன்று முறை துஷ்பிரயோகம் செய்துள்ளதாக கூறப்படுகின்றது.

எவ்வாறாயினும், குறித்த நபர் 2018ம் ஆண்டு முதல் இந்த குற்றத்தில் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நிலையில், அந்த ஆண்டின் முற்பகுதியில் இருந்து துஷ்பிரயோகம் செய்துள்ளமை உறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி, ஜனவரி 12 முதல் 13ம் திகதி வரையிலும், மார்ச் 21 முதல் 22ம் திகதி வரையிலும், ஜூன் 29 முதல் 30ம் திகதி வரையில் இரவு நேரங்களில் சந்தேகநபர் இந்த குற்றச்சாட்டில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தற்போது தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள குறித்த நபர், தியானம் அல்லது யோகசம் செய்வதற்கு குறித்த இடத்திற்கு வருவதை ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும், மது போதையில் இருந்தமையினால் ஆட்டினை துஷ்பிரயோகம் செய்தமை நினைவில் இல்லை என தெரிவித்துள்ளதாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் எதிர்வரும் டிசம்பர் 23ம் திகதி நீதிமன்றில் இடம்பெறும் என அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
gold price growth
இலங்கை

இன்றைய நாளில் உயர்வினை பதிவு செய்த தங்கத்தின் விலை.

இலங்கையில் தங்கத்தின் விலை இன்று அதிகரிப்பை பதிவு செய்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம்...

sajith premadasa
இலங்கை

எதிர்க்கட்சித் தலைவர் கொண்டுவந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானம்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள், இன்று பாராளுமன்றத்தில் வைத்து நம்பிக்கையில்லாத்...

Suresh Salley
இலங்கை

மீண்டும் விசாரணைக்கு வந்த சுரேஷ் சலே வழக்கு.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளுக்காக , பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது...

body
இலங்கை

இரத்தினபுரியில் மீட்கப்பட்ட இளம்பெண்ணின் சடலம்!

  இரத்தினபுரி , கொடிகமுவவில் பகுதியில் தனியாக வசித்து வந்த 32 வயதான கமகே நிசான்ச...