tamilni 342 scaled
இலங்கைசெய்திகள்

இலங்கையின் ஜனநாயக ஆட்சிமுறையில் மாற்றம்

Share

இலங்கையின் ஜனநாயக ஆட்சிமுறையில் மாற்றம்

மாற்றுக் கொள்கைகளுக்கான மையம் அண்மையில் நடத்திய ஆய்வில், இலங்கையில் ஜனநாயக ஆட்சிமுறை தொடர்பான போக்குகள் மாற்றமடைந்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளன.

இலங்கையில் ஜனநாயகம் மற்றும் நல்லிணக்கம் பற்றிய கணக்கெடுப்பு என்ற தலைப்பில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், 25 மாவட்டங்களில் 1,350 பங்கேற்பாளர்கள் கலந்து கொண்டனர்.

ஆய்வின்படி, ஏறத்தாழ 10 இலங்கையர்களில் ஒருவர் எதேச்சதிகார ஆட்சிக்கான விருப்பத்தை வெளிப்படுத்தினார், இது 2018 இல் இருந்ததை விட எதேச்சதிகாரத்துக்கான விருப்பத்தில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பைக் குறிக்கிறது.

பெரும்பான்மையான மக்கள் ஜனநாயக ஆட்சியை ஆதரிக்கின்றனர் எனினும் சில சூழ்நிலைகளில், ஜனநாயக ஆட்சியை விட சர்வாதிகார ஆட்சியே அவர்களுக்கு விரும்பத்தக்கதாக அமைந்துள்ள கவலைக்குரிய உணர்வை இந்த கணக்கெடுப்பு எடுத்துக்காட்டுகிறது.

இந்தநிலையில் 2018 இல் சிறிசேன-விக்ரமசிங்க அரசாங்கத்தின் போது ஏற்பட்ட அரசியல் எழுச்சியுடன் சர்வாதிகாரத்திற்கு ஆதரவான போக்கு அதிகரித்துள்ளதாக மாற்றுக்கொள்கைளுக்கான மையம் தெரிவித்துள்ளது.

ஜனநாயக ஆட்சியின் மீதான அதிருப்தியின் காரணமாகவே எதேச்சதிகார ஆட்சியைத் தழுவுவதற்கான வாய்ப்பை இந்த போக்கு அறிவுறுத்துகிறது.

அத்துடன், நாடாளுமன்ற நிறுவனங்கள் மற்றும் அரசியல் கட்சிகள் மீதான மக்கள் நம்பிக்கையில் கூர்மையான சரிவை இந்த கணக்கெடுப்பு அம்பலப்படுத்தியுள்ளதாக மாற்றுக்கொள்கைளுக்கான மையம் தெரிவித்துள்ளது.

Share
தொடர்புடையது
செம்மணியில் இன்றைய நாளிலும் 09 எலும்பு கூடுக
இலங்கை

செம்மணியில் இன்றைய நாளிலும் 09 எலும்பு கூடுகள் – மீட்கப்பட்ட சான்றுப்பொருட்கள்!

இன்றைய தினம் திங்கட்கிழமை யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியின் 102ஆவது நாள் அகழ்வுப் பணிகள் தொடர்ச்சியாக...

மாளிகாவத்தையில் படுகொலை செய்யப்பட்ட கஞ்சிபானி இம்ரானின்
இலங்கை

கஞ்சிபானி இம்ரானின் மாமா படுகொலை – வெளியான பரபரப்பான CCTV காட்சிகள்!

மாளிகாவத்தையில் படுகொலை செய்யப்பட்ட கஞ்சிபானி இம்ரானின் மாமா என்பவரை துப்பாக்கியால் சுடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன....

5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை
இலங்கை

புலமைப்பரிசில் பரீட்சசையில் இடம்பெற்ற மோசடி – முறைப்பாடு அளித்துள்ள பெற்றோர்கள்!

நேற்றைய தினம் நடைபெற்ற 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் தமது பிள்ளைகளுக்கு அநீதி இழைக்கப்பட்டதாகத் தெரிவித்து...

சாகர காரியவசம்
இலங்கை

நிபந்தனைகளுடன் விடுவிக்கப்பட்டார் சாகர காரியவசம்.

நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசத்தினை பிணையில் விடுவிக்கக் கடுவலை நீதவான்...