sri lanka bus
இலங்கைசெய்திகள்

தடுப்பூசி அட்டை இருந்தால் மட்டுமே பஸ்களில் பயணம்!

Share

தடுப்பூசி அட்டை இருந்தால் மட்டுமே பஸ்களில் பயணம்!

கொரோனாத் தடுப்பூசி அட்டை இன்றி பஸ்களில் பயணம் செய்வதற்கு தடை விதிக்கும் வகையில் புதிய சட்டம் ஒன்றை மேல்மாகாணத்தில் அறிமுகம் செய்ய அரசு தீர்மானித்துள்ளது

இந்த நடைமுறை எதிர்வரும் ஒக்ரோபர் மாதத்திலிருந்து அமுல்படுத்த அரசு எதிர்பார்த்துள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா அச்சம் காரணமாக தற்போது தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை மிக வேகமாக நடைபெற்று வருகின்றது.

இந்த நிலையில் தடுப்பூசி அட்டை இன்றி பஸ்களில் பயணம் மேற்கொள்ள தடை விதிக்கும் வகையில் புதிய சட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்த அரசு தீர்மானித்துள்ளது.

இந்தச் சட்டத்தை கடுமையாக அமுல்படுத்துவதற்கு விதிமுறைகளை மீறுவோரை அடையாளம் காண விசேட பரிசோதகர்கள் நியமிக்கப்படவுள்ளனர் எனவும் மேல்மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகார சபை தெரிவித்துள்ளார்.

மேல் மாகாணத்தில் 6 ஆயிரத்து 200 பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றன. அத்துடன் குறித்த பஸ்களின் உரிமையாளர்கள், ஊழியர்கள் அனைவரும் தடுப்பூசி பெற்றுக்கொண்டிருப்பது அவசியம் எனவும் அதிகார சபை தெரிவித்துள்ளது.

பயணிகள் அனைவரும் தடுப்பூசி அட்டையை வைத்திருக்கிறார்களா எனவ சோதனை மேற்கொள்ள வேண்டியது பஸ் நடத்துநர்களின் கடமை எனவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered 12
இலங்கைசெய்திகள்

கந்தளாய் சூரியபுர பகுதியில் லொறி விபத்து

கந்தளாய் சூரியபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சமகிபுர பகுதியில் ஒரு லொறி வீதியை விட்டு விலகி ஆற்றில்...

Untitled 1 Recovered Recovered 11
இலங்கைசெய்திகள்

கொழும்பில் நாளை முதல் நடைமுறைக்கு வரவுள்ள விசேட போக்குவரத்து திட்டம்!

போரா மாநாட்டை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். போரா மாநாடு...

Untitled 1 Recovered Recovered 9
இலங்கைசெய்திகள்

அதிகரிப்பைப் பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அதன்படி, இன்றையதினம்(24)...

Untitled 1 Recovered Recovered 8
இலங்கைசெய்திகள்

திடீரென இஸ்ரேலை எச்சரித்த ட்ரம்ப்!

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தக்கூடாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்....