4 9
இலங்கைசெய்திகள்

யாழ். கொழும்பு தொடருந்து சேவை குறித்து முக்கிய அறிவிப்பு

Share

யாழ். கொழும்பு தொடருந்து சேவை குறித்து முக்கிய அறிவிப்பு

யாழ்ப்பாணத்திலிருந்து (Jaffna) கொழும்பு (Colombo) வரையான குளிரூட்டப்பட்ட கடுகதி தொடருந்து சேவையானது எதிர்வரும் 30 ஆம் திகதி மேலதிக சேவையை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை காலமும் வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு ஆகிய தினங்களில் மாத்திரம் இச்சேவையை வழங்கி வந்த கடுகதி தொடருந்து சேவை சுற்றுலாப் பயணிகளின் கோரிக்கைக்கு அமைவாக இம்மாதம் 30 ஆம் திகதி வரை தனது சேவையை தொடர்ச்சியாக முன்னெடுத்துள்ளது.

அதன்படி, ஒவ்வொரு நாளும் அதிகாலை 5. 30 மணிக்கு கொழும்பு புறக்கோட்டை தொடருந்து நிலையத்திலிருந்து பயணத்தை ஆரம்பிக்கும் குளிரூட்டப்பட்ட தொடருந்தானது முற்பகல் 11: 15 மணிக்கு யாழ்ப்பாணம் தொடருந்து நிலையத்தை வந்தடையும்.

மீண்டும் காங்கேசன்துறையிலிருந்து மதியம் 12. 34 இற்கு பயணத்தை ஆரம்பித்து இரவு 7.20 இற்குகொழும்பு புறக்கோட்டை தொடருந்து நிலையத்தை வந்தடைந்து தனது பயணத்தை நிறைவு செய்கிறது.

இதேவேளை கல்கிசை வரை பயணம் செய்யும் பயணிகள் புறக்கோட்டை தொடருந்து நிலையத்திலிருந்து மற்றுமொரு வாகனத்தின் ஊடாக தமது பயணத்தை மேற்கொள்ள வேண்டிய சூழல் இருப்பதாக பயணிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

அதிகளவாக பயணம் செய்யும் பயணிகள் கொழும்பின் புறநகர்ப் பகுதிகளான வெள்ளவத்தை (Wellawatte), பம்பலப்பிட்டி, கல்கிசை ஆகிய பகுதிகளுக்கும் செல்ல முடியாத நிலை காணப்படுகிறது.

தொடர்ச்சியான சேவையை கல்கிசை வரை வழங்குவதன் ஊடாகவே தம்மால் இலகுவாக பயணம் செய்ய முடியும் எனவும் அதனை நிவர்த்தி செய்வதற்கு தொடருந்து திணைக்களம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
லக்ஷ்மன் யாப்பா
இலங்கை

முன்னாள் அமைச்சர் மீது ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு வழக்குத் தாக்கல்!

முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தனவுக்கு எதிராக, வர்த்தகர் ஒருவரிடமிருந்து 10 இலட்சம் ரூபாய் பணத்தை...

nilam 1
இலங்கை

காணி அளவீட்டுக்கு எதிர்ப்பு வெளியிட்டு யாழில் இன்று போராட்டம்.

மருதங்கேணி பிரதேச செயலாளர் பிரிவில் படைத்துறைக்கு 25 ஏக்கர் வரையான காணி சுவீகரிப்பதற்கு எதிராக தற்போது...

crime 09
இலங்கை

பெண் மருத்துவரின் கொலைக்கு காரணம் என்ன? – நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட குற்றவாளிகள்.

தெல்தெனியவில் சடலமாக மீட்கப்பட்ட, பெண் உடலியல் சிகிச்சை நிபுணரின் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நான்கு...

col.uni
இலங்கை

மூடப்படுகிறதா கொழும்பு பல்கலைக்கழகம்?

கொழும்பு பல்கலைக்கழக மாணவர்களுக்கும் டெங்கு காய்ச்சல் பரவியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. நேற்று ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த,...