tamilnaadi 5 scaled
இலங்கைசெய்திகள்

முச்சக்கரவண்டி கட்டணங்களும் அதிகரிப்பு

Share

ஜனவரி மாதம் முதல் முச்சக்கரவண்டி கட்டணங்கள் அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக அகில இலங்கை முச்சக்கரவண்டி சாரதிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

ஜனவரி மாதம் முதல் வற் வரி அதிகரிப்பு நடைமுறைக்கு வரும் நிலையில், பெட்ரோலின் விலை அதிகரிக்குமாக இருந்தால் முச்சக்கரவண்டி கட்டணமும் அதிகரிக்கக்கூடும் என அந்த சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

நேற்றையதினம்(29) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அந்த சங்கத்தின் தலைவர் லலித் தர்மசேகர இதனை குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் அதிகரிக்கும் எரிபொருள் விலைக்கு ஏற்ப முதல் கிலோமீட்டருக்கான கட்டணம் அதிகரிக்கப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், கடந்த காலங்களில் அரசாங்கம் பெட்ரோல் விலையை உயர்த்திய போது, ​​ முச்சக்கரவண்டி கட்டணங்களை உயர்த்துவதற்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும், ஆனால் வற் திருத்தத்துடன் கட்டணங்கள் அதிகரிக்கப்படும் என்றும் அவர் இதன்போது குறிப்பிட்டார்.

Share
தொடர்புடையது
vellam 2
இலங்கை

களனி மற்றும் களு கங்கைகளுக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை தொடர்பில் வெளியான தகவல்கள்.

நேற்றைய தினம், பிற்பகல் 1.30 மணிக்கு களனி கங்கையை ஒட்டி பெரு வெள்ள அபாயமும், பிற்பகல்...

Gregory
இலங்கை

கிரிகோரி ஏரியின் வான்கதவுகள் திறப்பு.

இன்றைய தினம் பிற்பகல், நுவரெலியா பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக கிரிகோரி ஏரியின் நீர்மட்டம்...

யோஷித ராஜபக்ஷ
இலங்கை

யோஷித ராஜபக்ஷவிற்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்ஷ மற்றும் முன்னாள் கடற்படை தளபதி வசந்த...

heavy rain
இலங்கை

நோர்ட்டன் பகுதியில் 258.6 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவு.

வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவித்தலில் படி, கடந்த 24 மணித்தியாலங்களில் அதிகபட்ச மழைவீழ்ச்சி நுவரெலியா –...