tamilnaadi 5 scaled
இலங்கைசெய்திகள்

முச்சக்கரவண்டி கட்டணங்களும் அதிகரிப்பு

Share

ஜனவரி மாதம் முதல் முச்சக்கரவண்டி கட்டணங்கள் அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக அகில இலங்கை முச்சக்கரவண்டி சாரதிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

ஜனவரி மாதம் முதல் வற் வரி அதிகரிப்பு நடைமுறைக்கு வரும் நிலையில், பெட்ரோலின் விலை அதிகரிக்குமாக இருந்தால் முச்சக்கரவண்டி கட்டணமும் அதிகரிக்கக்கூடும் என அந்த சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

நேற்றையதினம்(29) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அந்த சங்கத்தின் தலைவர் லலித் தர்மசேகர இதனை குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் அதிகரிக்கும் எரிபொருள் விலைக்கு ஏற்ப முதல் கிலோமீட்டருக்கான கட்டணம் அதிகரிக்கப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், கடந்த காலங்களில் அரசாங்கம் பெட்ரோல் விலையை உயர்த்திய போது, ​​ முச்சக்கரவண்டி கட்டணங்களை உயர்த்துவதற்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும், ஆனால் வற் திருத்தத்துடன் கட்டணங்கள் அதிகரிக்கப்படும் என்றும் அவர் இதன்போது குறிப்பிட்டார்.

Share
தொடர்புடையது
29 6
செய்திகள்உலகம்

போர்நிறுத்தத்திற்கோ அல்லது பேச்சுவார்த்தைக்கோ ஈரான் ஒருபோதும் கோரிக்கை விடுக்கவில்லை: அப்பாஸ் அரக்சி

ஈரான் மற்றும் அமெரிக்கா – இஸ்ரேல் இடையிலான தற்போதைய போர்ச் சூழலில், ஈரான் எந்தவொரு போர்நிறுத்தத்தையோ...

28 6
செய்திகள்இந்தியா

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026: தேர்தல் ஆணையம் அட்டவணையை வெளியிட்டது

தமிழகத்தில் ஆளும் கட்சியான தி.மு.க. அரசின் பதவிக்காலம் எதிர்வரும் மே மாதம் 10-ஆம் திகதியுடன் நிறைவடைகிறது....

27 6
செய்திகள்இலங்கைபிராந்தியம்

உரத்திற்கும் QR குறியீடு வரும் அச்சம்: அரசாங்கத்தின் நிர்வாகத்தை விமர்சித்த சஜித் பிரேமதாச

விவசாயிகள் கொள்வனவு செய்யும் உரத்திற்கும் எதிர்காலத்தில் QR குறியீடு முறைமை அறிமுகப்படுத்தப்படலாம் என்ற அச்சம் எழுந்துள்ளதாக...

26 7
செய்திகள்உலகம்

லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்: உயிரிழப்பு 850 ஆக அதிகரிப்பு!

லெபனானில் இஸ்ரேல் முன்னெடுத்து வரும் வான்வழித் தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 850 ஆக உயர்ந்துள்ளதாக லெபனான்...