tamilnaadi 4 scaled
இலங்கைசெய்திகள்

எரிபொருள் விற்பனையில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம்

Share

நாட்டில் நிலவும் உயர் பணவீக்கம் காரணமாக, தினசரி எரிபொருள் விற்பனை சுமார் 40% குறைந்துள்ளதாக பெட்ரோலிய விநியோகஸ்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதன்படி, நாட்டின் பொருளாதாரம் சாதாரண நிலையில் இருந்த போது நாளொன்றுக்கு சுமார் ஐயாயிரம் மெற்றிக் தொன் பெட்ரோல் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

இதற்கமைய, நாளொன்றுக்கு விற்பனை செய்யப்படும் பெட்ரோலின் அளவு சுமார் இரண்டாயிரம் மெற்றிக் தொன்களாகவும், டீசல் விற்பனை சுமார் 1800 மெற்றிக் தொன்களாகவும் குறைந்துள்ளது.

இதேவேளை, சாதாரண நிலைமைகளின் போது நாளொன்றுக்கு சுமார் 4800 மெற்றிக் தொன் டீசல் விற்பனை செய்யப்பட்டுள்ளதுடன், தற்போது நாளொன்றுக்கு சுமார் 3000 மெற்றிக் தொன் டீசல் விற்பனை செய்யப்படுவதாகவும் கூறப்படுகின்றது.

எவ்வாறாயினும், அடுத்த வருடம் முதலாம் திகதி VAT வரி காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகரிக்கப்பட்டால் எரிபொருள் விற்பனை மேலும் வீழ்ச்சியடையும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

அந்த வகையில், எரிபொருள் விற்பனை குறையும் பட்சத்தில் எரிபொருள் நிரப்பு நிலையங்களை பராமரிக்க முடியாத நிலை ஏற்படும் எனவும் பெட்ரோலிய விநியோகஸ்தர்கள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...