பஸ்ஸுடன் மோதியது ஓட்டோ
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

பஸ்ஸுடன் மோதியது ஓட்டோ! – மூவர் பரிதாபச் சாவு

Share

பொலனறுவை – மட்டக்களப்பு வீதியில், மனம்பிட்டிய பிரதேசத்தில் கொடலிய பாலத்துக்கு அருகில் பஸ்ஸுடன் ஓட்டோ மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்தக் கோர விபத்தில் ஓட்டோவில் பயணித்த மூவர் உயிரிழந்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

ஓட்டோவில் பயணித்த அரலகங்வில பிரதேசத்தைச் சேர்ந்த 67 மற்றும் 62 வயதுடைய வயோதிபத் தம்பதியினரும், 72 வயதுடைய உறவினருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

மூவரும் ஓட்டோவில் அரலகங்வில – அருணபுர பகுதியிலிருந்து மாத்தளையில் உள்ள உறவினர் ஒருவரின் வீட்டுக்குச் சென்றுகொண்டிருந்தபோதே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

குறித்த ஓட்டோ பஸ்ஸை முந்திச் செல்ல முற்பட்டபோது பஸ்ஸுடன் மோதி விபத்துக்குள்ளானது என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், பஸ்ஸின் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

#SriLankaNews

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
TNA
இலங்கை

சி.வி.கே.சிவஞானத்தின் வீட்டிற்கு வந்த சங்கு.

இலங்கைத் தமிழரசுக் கட்சி மற்றும் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் தலைவர்களுக்கிடையில் முக்கிய கலந்துரையாடல் ஒன்று...

sumanthiran
இலங்கை

சுமந்திரன் வேண்டாம் – வெடித்தது போராட்டம்.

நாளைய தினம், சுழிபுரம் விக்டோரியா கல்லூரியின் 150வது ஆண்டு விழாவினை முன்னிட்டு நடைபெறவுள்ள நடைபவனிக்கு சட்டத்தரணி...

selvam
இலங்கை

தமிழ் மற்றும் முஸ்லீம் கடசிகள் ஒன்றிணைவு – சொற்போரில் ஈடுபட்டுள்ள இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் செல்வம் அடைக்கலநாதன்

தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகளை ஒன்றிணைத்து புதிதாக உருவாக்கப்பட்டுள்ள கூட்டமைப்பை கூட்டுச் சாம்பார் என்றும், இது...

இலங்கை

மின்னல் தாக்கத்தினால் பலியாவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு.

ஆண்டுதோறும் 50க்கும் மேற்பட்டோர், நாட்டில் மின்னல் தாக்கங்களால் உயிரிழப்பதாக இன்று கொழும்பில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சி...