vv 1
இலங்கைசெய்திகள்

223 ஆமைகளுடன் மூவர் கைது

Share

நீர்கொழும்பு பகுதியில் நான்கு மாடிகளைக் கொண்ட வீடொன்றில் வளர்ப்பதற்கு தடைசெய்யப்பட்ட உயிரினமான 223 நட்சத்திர ஆமைகள் மீட்கப்பட்டுள்ளன.

அத்துடன் இது தொடர்பில் சந்தேகத்தின் பேரில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அனுமதிப் பத்திரம் இன்றி நட்சத்திர ஆமைகளை வைத்திருப்பதற்கோ அல்லது வாகனங்களில் ஏற்றி செல்லவோ அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் 223 நட்சத்திர ஆமைகளை ரெஜிபோம் பெட்டிகளில் அடைத்து வாகனங்களில் கொண்டு செல்ல தயார் செய்யப்பட்ட நிலையில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களில் இருவர் இந்தியப் பிரஜைகள் எனவும் ஒருவர் முல்லேரியாவைச் சேர்ந்தவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இவர்களிடமிருந்து லொறி ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர்களின் விசாரணைகளை மேற்கொண்டு நீர்கொழும்பு நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Government Unveils Plans to Boost Domestic Aviation in Support of Tourism
இலங்கைசெய்திகள்

சுற்றுலாத்துறையை ஊக்குவிக்க உள்நாட்டு விமான சேவைகள் விரிவாக்கம்: அமைச்சர் அனுர கருணாதிலக்க உறுதி!

இலங்கையின் சுற்றுலாத்துறையை அடுத்தகட்டத்திற்கு கொண்டு செல்லும் நோக்கில், உள்நாட்டு வானூர்தி போக்குவரத்து வலையமைப்பை வலுப்படுத்துவதற்கான புதிய...

94745991
செய்திகள்உலகம்

சிரியாவில் அமெரிக்காவின் ஆபரேஷன் ஹாக்ஐ ஸ்ட்ரைக்: ஐஎஸ் இலக்குகள் மீது மீண்டும் வான்வழித் தாக்குதல்!

சிரியாவில் நிலைகொண்டுள்ள ஐஎஸ் (IS) பயங்கரவாத அமைப்பினரை இலக்கு வைத்து, அமெரிக்கப் படைகள் மற்றும் அதன்...

default
உலகம்செய்திகள்

ஈரானில் 14-வது நாளாகத் தொடரும் போராட்டம்: 116 பேர் உயிரிழப்பு; போராட்டக்காரர்களுக்கு மரண தண்டனை எச்சரிக்கை!

ஈரானில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடி மற்றும் விலைவாசி உயர்வுக்கு எதிராகத் தொடங்கிய மக்கள் போராட்டம்,...

1185212 anbu
செய்திகள்இலங்கை

யாருடன் கூட்டணி? – ராமதாஸ் இன்று சென்னை வருகை; நாளை வெளியாகிறது அதிரடி அறிவிப்பு!

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், பாட்டாளி மக்கள் கட்சியின் (பா.ம.க) கூட்டணி நிலைப்பாடு...