image 5002d73377
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

19 ஆயிரம் லீற்றர் டீசலுடன் மூவர் கைது!

Share

கறுப்பு சந்தையில் விற்பனை செய்யும் நோக்கில் 19 ஆயிரம் லீற்றர் டீசலை கடத்திய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அம்பாந்தோட்டை விசேட அதிரடிப்படையின் புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலொன்றின் அடிப்படையிலேயே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அம்பாந்தோட்டை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து, மீன்களை கொண்டு செல்லும் பாணியில், இரு கனரக வாகனங்களில், தண்ணீர் கொல்களன்களின் டீசலை சேகரித்தே டீசல் கடத்தப்பட்டுள்ளது.

அம்பாறை நோக்கி செல்லும் வழியிலேயே வாகனங்கள், சுற்றிவளைக்கப்பட்டு கைதும், கைப்பற்றலும் இடம்பெற்றுள்ளது.

கைப்பற்றப்பட்ட டீசலின் பெறுமதி 80 லட்சம் ரூபாவுக்கும் மேல் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையில் ஒரே தடவையில் அதிகளவு டீசல் கைப்பற்றப்பட்ட முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...