வெளிநாடுகளில் இருந்து வருவோர் இனி நேரடியாக வீடுகளுக்கே!

5559

வெளிநாடுகளில் இருந்து வருவோர் இனி நேரடியாக வீடுகளுக்கே!

வெளிநாடுகளில் இருந்து நாட்டுக்கு வருவோருக்கு விமான நிலையத்திலேயே பி.சி.ஆர் பரிசோதனை செய்யப்பட்ட சில மணி நேரத்திலேயே அவர்களை வீடுகளுக்கு அனுப்பி வைக்க அரசு தீர்மானித்துள்ளது என சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

வெளிநாடுகளில் இருந்து இலங்கை வருவோரை பி.சி.ஆர் பரிசோதனை முடிவுகள் கிடைக்கப் பெறும் வரை ஹோட்டல்களில் உள்ள தனிமைப்படுத்தல் நிலையங்களில் தங்க வைக்கப்பட்டு வந்தனர்.

குறித்த தனிமைப்படுத்தல் விடுதிகளில் மோசடி இடம்பெறுவதாகவும் அதிகளவு கட்டணங்களை வசூலிக்கும் செயற்பாடு நடைபெறுவதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

இது தொடர்பில் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச அவதானம் செலுத்தியதுடன், அது தொடர்பில் நடவடிக்கை எடுக்க சுகாதார அமைச்சருக்கு அறிவுறுத்தலும் வழங்கியுள்ளார்.

அதன்படி வெளிநாடுகளில் இருந்து வருவோருக்கு விமான நிலையத்திலேயே பி.சி.ஆர். சோதனை மேற்கொண்டு சில மணிநேரத்துக்குள் அவர்களை வீடுகளுக்கு அனுப்பி வைக்க அரசு தீர்மானித்துள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது.

Exit mobile version