பிரித்தானியாவைச் சேர்ந்த இராணுவ ஆய்வாளர் பிரபாகரன், பிரபல ஊடக நிறுவன நிகழ்ச்சி ஒன்றில் கருத்து தெரிவிக்கும் போது, முன்னாள் ஆட்சியாளர்களுடன் இணைந்து பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் தற்போது சிறையில் இருப்பதால், சிறைச்சாலையே மிகவும் மோசமான இடமாக பார்க்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய பலர் அடையாளம் காணப்பட்டு, அநுர அரசாங்கத்தினால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்புடைய நீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து முன்னாள் அரசியல்வாதிகள் சிலர் ஆட்டம் கண்டுள்ளனர் எனவும் இதனால் வெளியில் இருப்பவர்களிடையே தற்போது ஒருவித அச்சநிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், சிறைச்சாலைகளில் குழப்பங்களை ஏற்படுத்தி, குற்றவாளிகளை மீண்டும் சமூகத்தில் நடமாடவிட்டு நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்துவதே சில அரசியல் தலைவர்களின் நோக்கம் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

