அரசியல்இலங்கைசெய்திகள்

இடைக்கால அரசும் இல்லை; பதவியும் விலகமாட்டேன்! – மஹிந்த மீண்டும் அறிவிப்பு

mahinda 1
Share

“நாட்டின் தற்போதைய நெருக்கடிக்கு இடைக்கால அரசு தீர்வு அல்ல. அப்படிப்பட்ட அரசு தற்போது அமையவும் சந்தர்ப்பம் இல்லை.”

– இவ்வாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ச தம்மிடம் நேற்றிரவு உறுதியளித்தார் என்று அவரின் சகாவும் முன்னாள் அமைச்சருமான ரோஹித அபேகுணவர்தன எம்.பி. தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

“மகாசங்கத்தினர் எந்த நிலைப்பாட்டை எடுத்தாலும் பிரதமர் பதவியிலிருந்து தான் ஒருபோதும் விலகமாட்டார் என்றும், மக்கள் ஆணையின் பிரகாரம் அந்தப் பதவியிலிருந்து ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஆட்சியை முன்நகர்த்துவார் என்றும் பிரதமர் எம்மிடம் குறிப்பிட்டார்.

நாடாளுமன்றத்தில் 113 இற்கும் மேற்பட்டோரின் ஆதரவு ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி அரசுக்கு இருக்கின்றபோது பிரதமர் பதவியை எப்படி இராஜிநாமா செய்ய முடியும் என்றும் பிரதமர் எம்மிடம் கேள்வி எழுப்பினார்.

பிரதமரின் இந்த நிலைப்பாட்டை நாம் வரவேற்கின்றோம். அவர் அரசமைப்பை மீறிச் செயற்படவில்லை. மக்கள் ஆணைக்கு மதிப்பளித்து அரசமைப்பின் பிரகாரமே அவர் செயற்படுகின்றார். குறுக்கு வழியில் பிரதமரைப் பதவியிலிருந்து விலக்கிவிட்டு ஆட்சியமைக்கத் துடிப்போர் இதைக் கவனத்தில்கொண்டு செயற்பட வேண்டும்” – என்றார்.

எனினும், நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகளையும் உள்ளடக்கி சர்வகட்சி அரசை அமைப்பதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அழைப்பு விடுத்துள்ளார்.

2020ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்குப் பின்னர் ஆளும் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்திய – தற்போது சுயாதீனமாகச் செயற்படும் கட்சித் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளுடன் நேற்று முற்பகல் ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
29 2
உலகம்செய்திகள்

செங்கடலில் அடுத்தடுத்து அமெரிக்க போர் விமானங்கள் விபத்து: உயிர் தப்பிய விமானிகள்!

செங்கடலில் அமெரிக்க போர் விமானம் ஒன்று விமானம் தாங்கி கப்பலில் தரையிறங்கும் போது ஏற்பட்ட விபத்தில்...

26 4
உலகம்செய்திகள்

பெரிய அறிவிப்பு ஒன்று விரைவில் வெளியாகும்: ட்ரம்ப் செய்தியால் பரபரப்பாகும் இணையம்

அதிரவைக்கும் மிகப்பெரிய அறிவிப்பு ஒன்று விரைவில் வெளியாகும் என ட்ரம்ப் கூறியுள்ள விடயத்தால் இணையம் பரபரப்பாகியுள்ளது....

27 3
உலகம்செய்திகள்

அணு ஆயுத நாடுகள் 2024: இந்தியா எங்கே உள்ளது? – அதிர்ச்சி தரும் உண்மைகள்!

இந்தியா-பாகிஸ்தான் இடையே அதிகரித்து வரும் போர் பதற்றம் இருநாட்டு மக்களிடையே உச்சக்கட்ட விழிப்பு நிலையை ஏற்படுத்தியுள்ள...

28 3
உலகம்செய்திகள்

போரில் பாகிஸ்தான் வென்றால் அந்த இந்திய நடிகை வேண்டும் – மதகுரு சர்ச்சை பேச்சு

காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 26 பேர் உயிரிழந்தனர்....