29 2
உலகம்செய்திகள்

செங்கடலில் அடுத்தடுத்து அமெரிக்க போர் விமானங்கள் விபத்து: உயிர் தப்பிய விமானிகள்!

Share

செங்கடலில் அமெரிக்க போர் விமானம் ஒன்று விமானம் தாங்கி கப்பலில் தரையிறங்கும் போது ஏற்பட்ட விபத்தில் பலத்த சேதமடைந்துள்ளது.

செங்கடலில் அமெரிக்க போர் விமானம் ஒன்று செங்கடல் பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் இரண்டாவது முறை ஆகும்.

அமெரிக்காவின் விமானம் தாங்கி கப்பலில் தரையிறங்கும் முயற்சியின்போது ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

பாதுகாப்பு அதிகாரிகள் வெளியிட்டுள்ள தகவலின்படி, F/A-18 Super Hornet ரகத்தைச் சேர்ந்த அதிநவீன போர் விமானம் ஒன்று செவ்வாய்க்கிழமை யுஎஸ்எஸ் ஹாரி எஸ் ட்ரூமன்(USS Harry S Truman) என்ற அமெரிக்க கடற்படைக் கப்பலில் தரையிறங்க முயன்றது.

அப்போது எதிர்பாராத விதமாக ஏற்பட்ட தோல்வியின் காரணமாக விமானத்தில் இருந்த இரண்டு விமானிகளும் அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.

அதிர்ஷ்டவசமாக, உடனடியாக செயல்பட்ட மீட்புக் குழுவினர் இருவரையும் பத்திரமாக மீட்டனர்.

இந்த விபத்தில் விமானிகளுக்கு லேசான காயங்கள் மட்டுமே ஏற்பட்டதாகவும், கப்பலில் இருந்த மற்ற பணியாளர்கள் எவ்வித பாதிப்புமின்றி பாதுகாப்பாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவம், கடந்த ஏப்ரல் 28 ஆம் தேதி இதே விமானம் தாங்கி கப்பலில் நிகழ்ந்த மற்றொரு விபத்தைத் தொடர்ந்து வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
Melania Trump
உலகம்

ஈரானின் அடுத்த இலக்கு – ட்ரம்ப் குடும்பத்திற்கு உச்ச கட்ட பாதுகாப்பு.

ஈரானின் உச்சத் தலைவர் மற்றும் மூத்த அதிகாரிகள் கொல்லப்பட்ட கூட்டுத் தாக்குதலுக்கு பின்னர், ஈரானின் முக்கிய...

European Union ggg
உலகம்உலகம்

ஐரோப்பிய ஒன்றியத்திற்கு கடும் எச்சரிக்கை விடுத்த டொனால்ட் ட்ரம்ப்

ஐரோப்பிய ஒன்றியம், கூகுள் நிறுவனம் தனது தேடல் முடிவுகளில் சொந்த சேவைகளுக்கு முன்னுரிமை அளித்ததாகவும், ஐரோப்பிய...

arrested woman with handcuffs
உலகம்

நேட்டோவை உளவு பார்த்த சீன பெண்!

பெல்ஜியத்தின் மான்ஸ் பகுதியில் அமைந்துள்ள ‘ஷேப்’ எனப்படும் நேட்டோ இராணுவத் தலைமையகத் தளத்தில் பயிற்சிப் பணியாளராக...

உமா குமரன்
உலகம்

பிரித்தானிய அரசாங்கத்தில் முக்கிய பொறுப்பில் ஈழத்தமிழ்ப் பெண்

இலங்கைத் தமிழரான உமா குமரன், பிரித்தானியாவின் வெளிநாட்டு அமைச்சகத்தில் இணை அமைச்சராக பதவி வகித்து வந்த...