Ranil 5
அரசியல்இலங்கைசெய்திகள்

வன்முறையற்ற போராட்டங்களுக்கு தடையில்லை!

Share

நாட்டில் அமைதியான, வன்முறையற்ற ஒன்றுகூடல் உரிமையை நிலைநாட்டுவதற்கு இலங்கையின் அர்ப்பணிப்பை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதிப்படுத்தியுள்ளார் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில்,

சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கையின் 21ஆவது சரத்தும் அமைதியான முறையில் ஒன்று கூடுவதற்கான உரிமைகளை பேணும் அரசியலமைப்பின் 14 (1) (ஆ) உறுப்புரையும் தற்போதைய அரசாங்கத்தால் உறுதிப்படுத்தப்படுகிறது..

அரசாங்க கட்டடங்களை கைப்பற்றுவதற்கும் சொத்துக்களை பிற நோக்கங்களுக்காக பயன்படுத்துவதற்கும் ஆர்ப்பாட்டக்காரர்களை அனுமதிக்கக் கூடாதென அமெரிக்க சிவில் சுதந்திர சங்கம் வழங்கிய அறிவுறுத்தல்களில் குறிப்பிட்டுள்ளது.

சொத்துக்களுக்கும் உயிர்களுக்கும் ஆபத்து ஏற்படாமல் நகரில் அகிம்சை வழியில் போராட்டங்களை தொடர அனுமதிக்கப்படுவதை உறுதி செய்வதற்கு எடுக்கப்படும் நடவடிக்கைகள் தொடர்பிலும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

விஹாரமஹாதேவி பூங்காவில் திறந்தவெளி அரங்கு, புதிய நகர மண்டபம், ஹைட் பார்க் மற்றும் கெம்பல் பார்க் போன்ற கொழும்பிலுள்ள வசதிகள் அனைத்தும் வன்முறையற்ற போராட்டங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

கோட்டா கோ கம போராட்டத் தளம் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ள தகவல்கள் தவறானவை என்றும், பாதுகாப்பு தரப்பினரால் அகற்றப்படவில்லை என்றும் ஜனாதிபதி தெரிவித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...