Screenshot 20221020 210351 WhatsApp
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

இந்துசமய வரலாறுகளை அறிய வழிமுறைகள் இல்லை –

Share

தற்போதைய மாணவர்கள் இந்து சமய வரலாறுகளை கற்பதற்குரிய வழி முறைகள் தற்காலத்தில் காணப்படுவது இல்லை என யாழ். பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சி.சிறீசற்குணராஜா தெரிவித்தார்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வேந்தரும் தகைசார் பேராசிரியருமான சி.பத்மநாதனின் திருக்கேதீஸ்வரம், திருக்கோணேஸ்வரம் பற்றிய மூன்று ஆய்வு நூல்களின் வெளியீட்டு விழாவில் தலைமை உரை நிகழ்த்தும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர், மேலும் தெரிவிக்கையில், “குறிப்பாக மகாபாரதம் , இராமாயணத்தை தற்போதுள்ள மாணவர் சமூகமானது சினிமா  மூலம் தொலைக்காட்சி நாடகங்கள் மூலம் மாத்திரமே பார்வையிடக்கூடிய நிலை காணப்படுகின்றது. இதன் காரணமாக நீண்ட கால வரலாற்றை கொண்ட நமது இந்து மதத்தின் வரலாறுகளை தற்போதுள்ள இளைஞர்கள் அறிவதற்கு சந்தர்ப்பங்கள் குறைவாக காணப்படுகிறது

திருகோணஸ்வரம், திருக்கேதீஸ்வரம் போன்ற ஆலயங்களுக்கு நெருக்கடி வரும்போதே அதனுடைய அருமை தெரிகிறது. நெருக்கடிகள் சில காலத்திற்கு ஏற்படும். காலத்திற்கு காலம் போத்துக்கேயர், ஒல்லாந்தர்கள் வந்தார்கள். தற்போதும் திருகோணஸ்வரம், திருக்கேதீஸ்வரம் போன்ற ஆலயங்களுக்கு நெருக்கடி ஏற்படுகின்றது” – என்றார்.

#Srilanka news

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
ஹட்டன் கல்வி வலயம்
இலங்கை

ஹட்டன் கல்வி வலயம் வெளியிட்டுள்ள தகவல்.

சீரற்ற வானிலை பாதிப்பை கருத்திற் கொண்டு நேற்று முன்தினம் முதல் ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளுக்கு...

ஹர்ஷ சுரங்க பெர்னாண்டோ
இலங்கை

மத்திய மாகாணத்தின் புதிய ஆளுநர் பதவியேற்பு!

ஜனாதிபதி செயலகத்தில், மத்திய மாகாணத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள ஓய்வுபெற்ற சமூக மருத்துவ நிபுணர் ஹர்ஷ...

அகில விராஜ் காரியவசம் 2
இலங்கை

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர்!

  வாக்குமூலம் வழங்குவதற்காக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலையான நிலையில் முன்னாள் அமைச்சர் அகில விராஜ்...

ஜனாதிபதியை சந்தித்தார் இந்திய வெளியுறவுச் செயலாள
இலங்கை

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை சந்தித்தார் இந்திய வெளியுறவுச் செயலாளர்.

இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி, இன்று பிற்பகல் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை கொழும்பில்...