செய்திகள்இலங்கை

பெப்ரவரியில் நிலைமை மோசமாகலாம்! – சுகாதார அமைச்சு எச்சரிக்கை

Ministry of Health 1 scaled
Share

நாட்டில் கொரோனாத் தொற்றால் சிறுவர்கள் அதிகரித்து வரும் நிலை காணப்படுகிறது என சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஜி. விஜேசூரிய தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் சிறுவர்களின் விகிதம்
தற்போது அதிகரித்துள்ளது.

நாட்டில் தற்போது தொற்றின் வேகம் வயது வித்தியாசமின்றி பரவலாக அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் தோற்றால் சிறுவர்கள் பதிப்பதற்கான சாத்தியங்கள் அதிகம் உள்ளன. இந்த நிலையில், பெற்றோர் சிறுவர்கள் தொடர்பில் அவதானமாக இருக்க வேண்டும்.

கொரோனாத் தோற்றால் பாதிக்கப்பட்ட 50 க்கும் அதிகமான சிறுவர்கள் லேடி ரிட்ஜ்வே மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். இதேவேளை நாளாந்தம் 10 முதல் 15 சிறுவர்கள் கொரோனாத் தொற்று சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுகின்றனர்.

இந்த நிலை அடுத்த மாதம் நடுப்பகுதியளவில் மேலும் அதிகரிக்கக்கூடும்.

ஆபத்திலிருந்து தவிர்த்துக்கொள்ள 12 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசியை செலுத்திக்கொள்ள வேண்டும். இதேவேளை, 20 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் விரைவாக பூஸ்டர் டோஸைப் பெற்றுக்கொள்ள வேண்டும் – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
29 2
உலகம்செய்திகள்

செங்கடலில் அடுத்தடுத்து அமெரிக்க போர் விமானங்கள் விபத்து: உயிர் தப்பிய விமானிகள்!

செங்கடலில் அமெரிக்க போர் விமானம் ஒன்று விமானம் தாங்கி கப்பலில் தரையிறங்கும் போது ஏற்பட்ட விபத்தில்...

26 4
உலகம்செய்திகள்

பெரிய அறிவிப்பு ஒன்று விரைவில் வெளியாகும்: ட்ரம்ப் செய்தியால் பரபரப்பாகும் இணையம்

அதிரவைக்கும் மிகப்பெரிய அறிவிப்பு ஒன்று விரைவில் வெளியாகும் என ட்ரம்ப் கூறியுள்ள விடயத்தால் இணையம் பரபரப்பாகியுள்ளது....

27 3
உலகம்செய்திகள்

அணு ஆயுத நாடுகள் 2024: இந்தியா எங்கே உள்ளது? – அதிர்ச்சி தரும் உண்மைகள்!

இந்தியா-பாகிஸ்தான் இடையே அதிகரித்து வரும் போர் பதற்றம் இருநாட்டு மக்களிடையே உச்சக்கட்ட விழிப்பு நிலையை ஏற்படுத்தியுள்ள...

28 3
உலகம்செய்திகள்

போரில் பாகிஸ்தான் வென்றால் அந்த இந்திய நடிகை வேண்டும் – மதகுரு சர்ச்சை பேச்சு

காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 26 பேர் உயிரிழந்தனர்....