avatar
இலங்கைஅரசியல்செய்திகள்

நாட்டின் வளங்கள் நாளாந்தம் அடகு வைக்கப்படுகின்றன! – சாடுகிறார் பிமல் ரத்னாயக்க

Share

நாட்டின் வளங்கள் நாளாந்தம் அடகு வைக்கப்படுகின்றன என மக்கள் விடுதலை முன்னணி கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

நாவலப்பிட்டியில் ஏற்பாடு செய்யப்பட்ட  நிகழ்வொன்றில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் உரையாற்றுகையில், உர நெருக்கடியால் விவசாயிகள் பெரும் பிரச்சினைகளை எதிர்நோக்கி வரும் நிலையில்,  நானோ நைட்ரஜன் உரங்களை இறக்குமதி செய்து நிதியை முறைகேடாக பயன்படுத்தியுள்ளனர்.

நாட்டின் வளங்கள் நாளாந்தம் விற்கப்படுகின்றன. மேற்கு முனையம் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டது. கொழும்பு துறைமுகத்தின் 13 ஏக்கர் காணியையும் அரசாங்கம் சீனாவிடம் கையளித்துள்ளது.

கெரவலப்பிட்டி அனல்மின் நிலையத்தின் ஒரு பகுதியும் வெளிநாட்டு நிறுவனங்களிடம் கையளிக்கப்பட்டது.

இலங்கை எதிர்கொள்ளும் தற்போதைய கடன் நெருக்கடியானது கொவிட்-19 தொற்று நோயினால் அல்ல. அதிகாரத்தில் உள்ளவர்களினால்தான் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Murder Recovered Recovered Recovered 19
இலங்கைசெய்திகள்

கஹவத்தையில் கடும் பதற்றம்! பொதுமக்கள் மீது கண்ணீர் புகைத் தாக்குதல் நடத்தும் பொலிஸார்

கஹவத்தையில் பொலிஸார் மற்றும் பொதுமக்களுக்கு இடையில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக அங்கு கடும் பதற்றமான சூழல்...

Murder Recovered Recovered Recovered 17
இலங்கைசெய்திகள்

எமக்கு தொடர்பில்லை! செம்மணி அவலத்தில் இருந்து பொறுப்பு துறக்கும் அமைச்சர்

செம்மணி புதைகுழி சம்பவங்களுக்கும் தனது கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம்...

9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...