avatar
இலங்கைஅரசியல்செய்திகள்

நாட்டின் வளங்கள் நாளாந்தம் அடகு வைக்கப்படுகின்றன! – சாடுகிறார் பிமல் ரத்னாயக்க

Share

நாட்டின் வளங்கள் நாளாந்தம் அடகு வைக்கப்படுகின்றன என மக்கள் விடுதலை முன்னணி கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

நாவலப்பிட்டியில் ஏற்பாடு செய்யப்பட்ட  நிகழ்வொன்றில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் உரையாற்றுகையில், உர நெருக்கடியால் விவசாயிகள் பெரும் பிரச்சினைகளை எதிர்நோக்கி வரும் நிலையில்,  நானோ நைட்ரஜன் உரங்களை இறக்குமதி செய்து நிதியை முறைகேடாக பயன்படுத்தியுள்ளனர்.

நாட்டின் வளங்கள் நாளாந்தம் விற்கப்படுகின்றன. மேற்கு முனையம் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டது. கொழும்பு துறைமுகத்தின் 13 ஏக்கர் காணியையும் அரசாங்கம் சீனாவிடம் கையளித்துள்ளது.

கெரவலப்பிட்டி அனல்மின் நிலையத்தின் ஒரு பகுதியும் வெளிநாட்டு நிறுவனங்களிடம் கையளிக்கப்பட்டது.

இலங்கை எதிர்கொள்ளும் தற்போதைய கடன் நெருக்கடியானது கொவிட்-19 தொற்று நோயினால் அல்ல. அதிகாரத்தில் உள்ளவர்களினால்தான் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
1276730 0.jpeg
செய்திகள்உலகம்

ஈரான் சிறைப்பிடித்த எண்ணெய்க் கப்பல் ‘தலாரா’ விடுவிப்பு: 21 பணியாளர்களும் பாதுகாப்பாக உள்ளனர்!

ஹாா்முஸ் நீரிணைப் பகுதியில் ஈரான் கடந்த வாரம் சிறைப்பிடித்த, மாா்ஷல் தீவுகளின் கொடியேற்றப்பட்ட ‘தலாரா’ (Talara)...

pm modi 13 20251119144744
இந்தியாசெய்திகள்

ஜி20 மாநாட்டில் பங்கேற்க இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தென்னாபிரிக்காவிற்குப் பயணம்!

இந்திய பிரதமர் நரேந்திர மோடி தென்னாபிரிக்காவிற்கு விஜயம் செய்யத் தயாராகி வருவதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன....

images 5 7
செய்திகள்பிராந்தியம்

யாழ்ப்பாணத்தில் சோகம்: கால் தவறி கிணற்றில் வீழ்ந்த வெளிநாட்டுப் பிரஜை உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் – ஆறுகால்மடம் பகுதியில் நபரொருவர் கால் தவறி கிணற்றுக்குள் வீழ்ந்து பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர்...

images 4 8
இலங்கைசெய்திகள்

அரச மருத்துவமனைகளில் 150 மருந்து வகைகளுக்குத் தட்டுப்பாடு: சிகிச்சை சேவைகள் பாதிக்கப்படும் அபாயம் – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்!

அரச மருத்துவமனைகளில் சுமார் 150 மருந்து வகைகளுக்குத் தட்டுப்பாடு நிலவுவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்...