sajith
அரசியல்இலங்கைசெய்திகள்

ராஜபக்சக்கள் நிகழ்ச்சி நிரலிலேயே இப்போதும் ஆட்சி!!

Share

போராட்டத்தின் மூலம் ராஜபக்சர்கள் விரட்டியடிக்கப் பட்டாலும், தற்போதைய ராஜபக்ச நிழல் அரசாங்கம் மக்களின் ஜனநாயக உரிமையான வாக்குரிமை கூட பல்வேறு சதிகளால் தடுத்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தெஹியோவிட்ட பிரதேசத்தில் சனிக்கிழமை (18) இடம்பெற்ற பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே மேற்குறிப்பிட்ட விடயத்தை அவர் குறிப்பிட்டார்.

பல நூற்றாண்டுகளாக பெருமையுடன் அபிமானத்துடனும் வாழ்ந்து வந்த குடிமக்கள் இருந்த நம் நாட்டில் ராஜபக்சர்களின் ஊழல் நிறைந்த குடும்ப ஆட்சியினால் இந்த அபிமான தேசம் அழிந்ததாக சுட்டிக்காட்டினார்.

நண்பர் கூட்டம், முதலாளித்துவ ராஜபக்ச குடும்ப வாதம், ஊழல், இலஞ்சம் போன்றவற்றால் இந்நாடு வங்குரோத்து நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் கூறினார்.

நாட்டை இவ்வளவு பாதாளத்திற்கு கொண்டு சென்றது ராஜபக்ச குடும்பவாதமே எனவும், இதற்காக, 2005 இல் ராஜபக்சர்களை ஆதரித்து வீடு வீடாக சென்று தேர்தல் பிரசாரத்தை மேற்கொண்டது, நாட்டுக்கு தீர்வு என கூறிக்கொண்டிருக்கும் சிவப்பு தம்பிமார்கள் தான் எனவும் குறிப்பிட்டார்.

நாட்டை அழித்த ராஜபக்சர்களுக்கு அவர்கள் மகுடம் சூட்டினாலும் சஜித் பிரேமதாஸ ராஜபக்சர்களை ஆட்சிக்கு கொண்டு வர பாடுபடவில்லை எனவும், தாம் எப்போதும் பொதுமக்களுடனே இருப்பதாகவும்  சுட்டிக்காட்டினார்.

எதிர்வரும் தேர்தல் வெற்றியின் மூலம் எமது நாட்டிலிருந்து கொள்ளையடிக்கப்பட்ட சொத்துக்கள், செல்வங்கள் பணம் அனைத்தும் மீண்டும் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டு திருடர்களைப் பிடித்து வெளிப்படத்தன்மை வாய்ந்த அரச ஆட்சி  நடைமுறைப்படுத்தப்படும் என்றார்.

போராட்டத்தின் மூலம் ராஜபக்சர்கள் விரட்டியடிக்கப் பட்டாலும், தற்போதைய ராஜபக்ச நிழல் அரசாங்கம் மக்களின் ஜனநாயக உரிமையான வாக்குரிமை கூட பல்வேறு சதிகளால் தடுத்துள்ளதாக குறிப்பிட்டார்.

அவர்கள் மகிழ்ச்சியாக இருக்க போதுமான பணம் உள்ளபோதிலும், தேர்தல் செலவுக்கு மட்டும் பணம் இல்லை எனக் கூறுவது நகைப்புக்குரியது என்று தெரிவித்த அவர், தேர்தலை நடத்தாவிட்டால் ஜனநாயக ரீதியிலும் அமைதியான போராட்டத்தின் மூலமும் தேர்தலை எவ்வாறேனும் பெறுவோம் என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
asian tiger mosquito
செய்திகள்இலங்கை

இரண்டு நாட்களில் 581 நோயாளர்கள்: இலங்கையில் டெங்கு அச்சுறுத்தல் தீவிரம் – மேல் மாகாணத்தில் அதிக பாதிப்பு!

2026 ஆம் ஆண்டின் முதல் இரண்டு நாட்களில் பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை, கடந்த காலங்களுடன்...

1200 675 25395250 thumbnail 16x9 1
செய்திகள்உலகம்

சிறுவர்களுக்கு எதற்கு இரத்த அழுத்தம்? இருபது ஆண்டுகளில் இருமடங்காக அதிகரிப்பு – ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

சிறுவர்கள் மற்றும் பதின்ம வயதினரிடையே உயர் இரத்த அழுத்தப் பாதிப்பு கடந்த இருபது ஆண்டுகளில் இருமடங்காக...

images 12
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

சிறைச்சாலை போதைப்பொருள் வலைப்பின்னல்: மஹர முன்னாள் களஞ்சியக் காப்பாளரைத் தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி!

சிறைச்சாலையில் உள்ள பாரிய போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவருடன் இணைந்து போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது...

c062bcf6aceaa92908367ec4a579f375a27fd715ccd5277c234a953549da3bc8
உலகம்செய்திகள்

மதுரோவை உடனடியாக விடுதலை செய்: அமெரிக்காவின் நடவடிக்கையை மேலாதிக்கச் செயல் எனச் சீனா சாடல்!

வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவியை அமெரிக்கா கைது செய்துள்ளமைக்குச் சீனா தனது...