asian tiger mosquito
செய்திகள்இலங்கை

இரண்டு நாட்களில் 581 நோயாளர்கள்: இலங்கையில் டெங்கு அச்சுறுத்தல் தீவிரம் – மேல் மாகாணத்தில் அதிக பாதிப்பு!

Share

2026 ஆம் ஆண்டின் முதல் இரண்டு நாட்களில் பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை, கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில் சடுதியாக அதிகரித்துள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு எச்சரித்துள்ளது.

தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் சமூக மருத்துவர் பிரஷீலா சமரவீர இது குறித்துத் தெரிவிக்கையில், ஆண்டின் முதல் இரண்டு நாட்களில் மாத்திரம் 581 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதிகளவான நோயாளர்கள் மேல் மாகாணத்திலேயே பதிவாகியுள்ளனர்.

கடந்த சில வாரங்களாக நிலவிய மழையுடனான வானிலை காரணமாக, டெங்கு நுளம்புக் குடம்பிகளின் பெருக்கம் அதிகரித்துள்ளமை இதற்குக் காரணமாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்டால் அலட்சியமாக இருக்க வேண்டாம் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். காய்ச்சல், இருமல், சளி, கடுமையான உடல்வலி மற்றும் வாந்தி அறிகுறிகள் இருந்தால் கூடுதல் கவனம் தேவை:

காய்ச்சல் மூன்று நாட்களுக்கு மேல் நீடித்தால், உடனடியாக முழுமையான இரத்தப் பரிசோதனை (FBC) செய்துகொள்வது கட்டாயமாகும். காய்ச்சல் இரண்டு நாட்களுக்கு மேல் நீடித்தால், தாமதிக்காமல் தகுதியான வைத்தியரின் ஆலோசனையைப் பெற வேண்டும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

வீடு மற்றும் சூழலில் நீர் தேங்கும் இடங்களை அகற்றி, டெங்கு பரவலைக் கட்டுப்படுத்த ஒத்துழைக்குமாறு சுகாதார அமைச்சு மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.

 

 

Share
தொடர்புடையது
Featuredvdfv
இலங்கை

ஆபத்தான ஆயுதங்களுடன் இரத்மலானையில் பலர் கைது!

இரத்மலானை கொனா கோவில பகுதியில் 3 வாள்கள், 1 கோடரி, 3 கத்திகள் மற்றும் உள்நாட்டில்...

dead body 2
இலங்கை

தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட இளைஞர்!

இன்றைய தினம், யாழ்ப்பாணம் – நாரந்தனை பகுதியில் இளைஞர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக...

bus bike accident
இலங்கை

சற்று முன்னர் இடம்பெற்ற கோர விபத்து – பலியான வங்கி ஊழியர்!

அனுராதபுரம் – பாதெனிய வீதியில் மோட்டார் சைக்கிளும் தனியார் பேருந்தும் மோதி ஏற்பட்ட கோர விபத்தில்,...

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் ஒப்புதலுக்கு அமைவாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள்
இலங்கை

உயர் அதிகாரிகளுக்கு திடீரென வழங்கப்பட்ட இடமாற்றங்கள்.

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் ஒப்புதலுக்கு அமைவாக, சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் பலருக்கு இடமாற்றங்களை வழங்க பொலிஸ்...