sajith
அரசியல்இலங்கைசெய்திகள்

ராஜபக்சக்கள் நிகழ்ச்சி நிரலிலேயே இப்போதும் ஆட்சி!!

Share

போராட்டத்தின் மூலம் ராஜபக்சர்கள் விரட்டியடிக்கப் பட்டாலும், தற்போதைய ராஜபக்ச நிழல் அரசாங்கம் மக்களின் ஜனநாயக உரிமையான வாக்குரிமை கூட பல்வேறு சதிகளால் தடுத்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தெஹியோவிட்ட பிரதேசத்தில் சனிக்கிழமை (18) இடம்பெற்ற பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே மேற்குறிப்பிட்ட விடயத்தை அவர் குறிப்பிட்டார்.

பல நூற்றாண்டுகளாக பெருமையுடன் அபிமானத்துடனும் வாழ்ந்து வந்த குடிமக்கள் இருந்த நம் நாட்டில் ராஜபக்சர்களின் ஊழல் நிறைந்த குடும்ப ஆட்சியினால் இந்த அபிமான தேசம் அழிந்ததாக சுட்டிக்காட்டினார்.

நண்பர் கூட்டம், முதலாளித்துவ ராஜபக்ச குடும்ப வாதம், ஊழல், இலஞ்சம் போன்றவற்றால் இந்நாடு வங்குரோத்து நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் கூறினார்.

நாட்டை இவ்வளவு பாதாளத்திற்கு கொண்டு சென்றது ராஜபக்ச குடும்பவாதமே எனவும், இதற்காக, 2005 இல் ராஜபக்சர்களை ஆதரித்து வீடு வீடாக சென்று தேர்தல் பிரசாரத்தை மேற்கொண்டது, நாட்டுக்கு தீர்வு என கூறிக்கொண்டிருக்கும் சிவப்பு தம்பிமார்கள் தான் எனவும் குறிப்பிட்டார்.

நாட்டை அழித்த ராஜபக்சர்களுக்கு அவர்கள் மகுடம் சூட்டினாலும் சஜித் பிரேமதாஸ ராஜபக்சர்களை ஆட்சிக்கு கொண்டு வர பாடுபடவில்லை எனவும், தாம் எப்போதும் பொதுமக்களுடனே இருப்பதாகவும்  சுட்டிக்காட்டினார்.

எதிர்வரும் தேர்தல் வெற்றியின் மூலம் எமது நாட்டிலிருந்து கொள்ளையடிக்கப்பட்ட சொத்துக்கள், செல்வங்கள் பணம் அனைத்தும் மீண்டும் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டு திருடர்களைப் பிடித்து வெளிப்படத்தன்மை வாய்ந்த அரச ஆட்சி  நடைமுறைப்படுத்தப்படும் என்றார்.

போராட்டத்தின் மூலம் ராஜபக்சர்கள் விரட்டியடிக்கப் பட்டாலும், தற்போதைய ராஜபக்ச நிழல் அரசாங்கம் மக்களின் ஜனநாயக உரிமையான வாக்குரிமை கூட பல்வேறு சதிகளால் தடுத்துள்ளதாக குறிப்பிட்டார்.

அவர்கள் மகிழ்ச்சியாக இருக்க போதுமான பணம் உள்ளபோதிலும், தேர்தல் செலவுக்கு மட்டும் பணம் இல்லை எனக் கூறுவது நகைப்புக்குரியது என்று தெரிவித்த அவர், தேர்தலை நடத்தாவிட்டால் ஜனநாயக ரீதியிலும் அமைதியான போராட்டத்தின் மூலமும் தேர்தலை எவ்வாறேனும் பெறுவோம் என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
02 15
செய்திகள்உலகம்

எரிபொருள் விநியோகத்தை உறுதிப்படுத்த மேலதிக கப்பல்கள் வருகை: பெற்றோலியக் கூட்டுத்தாபனம்

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் சர்வதேச எரிபொருள் விநியோகச் சங்கிலியில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளைக் கருத்திற்கொண்டு,...

01 15
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் இன்று சில பகுதிகளில் மழை மற்றும் பனிமூட்டமான வானிலை!

வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள இன்றைய வானிலை அறிக்கையின்படி, நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் 2 மணிக்குப்...

29 6
செய்திகள்உலகம்

போர்நிறுத்தத்திற்கோ அல்லது பேச்சுவார்த்தைக்கோ ஈரான் ஒருபோதும் கோரிக்கை விடுக்கவில்லை: அப்பாஸ் அரக்சி

ஈரான் மற்றும் அமெரிக்கா – இஸ்ரேல் இடையிலான தற்போதைய போர்ச் சூழலில், ஈரான் எந்தவொரு போர்நிறுத்தத்தையோ...

28 6
செய்திகள்இந்தியா

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026: தேர்தல் ஆணையம் அட்டவணையை வெளியிட்டது

தமிழகத்தில் ஆளும் கட்சியான தி.மு.க. அரசின் பதவிக்காலம் எதிர்வரும் மே மாதம் 10-ஆம் திகதியுடன் நிறைவடைகிறது....