அப்பளத்தை
இலங்கைசெய்திகள்

அப்பளத்தை எடுத்து உண்ட சிறுமிக்கு தாய் வாயில் சூடு!

Share

சமைத்து வைத்த உணவிலிருந்த அப்பளம் ஒன்றை தாயாருக்குத் தெரியாது எடுத்து சாப்பிட்ட காரணத்தால் 5 வயது மகளுக்கு தாய் வாயில் சூடு வைத்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவம் கிளிநொச்சி அக்கராயன் விநாயகர் குடியிருப்புப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இந்தநிலையில் குறித்த தாய் அக்கராயன் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சிறுமியின் தந்தை தொழிலுக்கு சென்ற வேயை இந்தக் கொடூர செயல் இடம்பெற்றுள்ளது எனவும் இதனை அவதானித்த சிறுமியின் தாத்தா பொலிஸாருக்கு தகவல் அளித்துள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து தாயார் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சிறுமி கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் அக்கராயன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன் கைது செய்த தாயாரை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளனர்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
நவாலி திருவிழா
இலங்கை

நவாலி திருவிழாவிலும் அசம்பாவிதம் – பொதுமக்கள் பலரும் பாதிப்பு!

நேற்று இரவு, நவாலி அந்திரான் கிராமத்தில் நடைபெற்ற திருவிழாவின் போது வாணவேடிக்கையால் பனை மரம் ஒன்றும்...

dengue original 1
இலங்கை

எழுபதை கடந்தது டெங்கு மரணங்கள்!

2026 இன் இதுவரையான காலப்பகுதியில் நாடளாவிய ரீதியில் 93,381 ஆக அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப்...

சுற்றிவளைப்புக்கள்
இலங்கை

அதிரடியாக மேற்கொள்ளப்பட்டுள்ள சுற்றிவளைப்புக்கள் – 751 சந்தேக நபர்கள் கைது!

முழு நாடுமே ஒன்றாக நடவடிக்கையின் மூலம் கடந்த 24 மணி நேரத்தில் 751 சந்தேகநபர்கள் கைது...

சீன மின் விளக்குகள் பறிமுத
இலங்கை

ஆலய திருவிழாவில் ஏற்பட்ட அசம்பாவிதம் – நூற்றுக்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில்!

பண்டத்தரிப்பு பிரான்பற்று முருகன் ஆலயத்தில் நடைபெற்ற ஆலயத் திருவிழாவின் போது, நூற்றுக்கணக்கானோர் கண் பாதிப்புக்குள்ளான சம்பவம்...